இலங்கையர் ஒருவரை அடித்துக் கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் இன்னுமொரு இலங்கையருக்கு கட்டார் நீதிமன்றமொன்று மரண தண்டனை விதித்திருக்கிறது.
ரவி ராசலிங்கம் என்ற தமிழ் இளைஞனுக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சக நாட்டவரான பிரதீபன் ராமச்சந்திரன் என்ற இளைஞனை போத்தல் மற்றும் மட்பாண்டம் தயாரிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தலையில் அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காகவே இவருக்கு கட்டார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்கிறது.
பழைய தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்று இறுதியில் கொலையில் முடிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற 3 நாட்களின் பின்னர் அவரது தங்குமிடத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதியன்றே நஜ்மா எனும் பிரதேசத்தில் உள்ள தனது தங்குமிடத்தில் வைத்தே பிரதீபன் ராமச்சந்திரன் , ரவி ராசலிங்கத்தால் தாக்கப்பட்டிருக்கிறார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நட்டஈட்டுத் தொகையை ஏற்க மறுத்ததை அடுத்தே நாகலிங்கத்தைத் தூக்கிலிடுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதேநேரம், இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதி சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment