Tuesday 19 August 2008

பொலன்னறுவை - எகொடபத்துவ கிராமம் - மட்டக்களப்புடன் இணைப்பா? முடியாது என்கிறது ஐ.தே.க

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள எகொடபத்துவ பிரதேசத்தை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைப்பது உள்ளிட்ட பலவேறு இணக்கங்களை உள்ளடக்கி அரசாங்கத்தினால் பிள்ளையான் தரப்புடன் செய்துகொண்ட ரகசிய உடன்படிக்கை தொடர்பாக ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.


எகொடபத்துவ பிரதேசத்தை நிர்வாக ரீதியாக முதலில் மட்டக்களப்புடன் இணைத்து, முழுமையாக மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கவும் இந்த ரகசிய உடன்படிக்கை மூலம் இணக்கம் காணப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பிள்ளையான் குழுவினரின் 16 முகாம்கள் எகொடபத்துவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரத்து 696 தமிழ் வாக்காளர்களில் 7 ஆயிரத்து 800 பேர் எகொடபத்துவ பிரதேசத்தில் வசிக்கின்றனர்.


அத்துடன் ஒரு லட்சத்து 12 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வருகின்றனர். இந்த விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில் பிள்ளையான் தரப்பினரை குடியமர்த்தும் செயற்திட்டமும் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: