நேர்வே ஓஸ்லோ, பேர்கன், துர்னெயம், ஸ்ரவங்கர், மொல்ட்டே, ஓலசூண்ட், புலூரா போன்ற நகரங்களில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நோர்வே ஒஸ்லோவில் மாபெரும் பொங்குதமிழ் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.பொங்கு தமிழ் நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழகத்தைச்சேர்ந்த உணர்வாளர்கள் பாவலரும், தமிழீழ ஆதரவாளருமான அறிவுமதி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தேசியக் கொடியினை தமிழகத்தில் வருகைதந்திருந்த பாவலர் அவர்களும் புலமைப்பித்தன் ஆகியோர் ஏற்றினர்.இதனைத் தொடர்ந்து தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் உரை காணொளியில் காண்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment