மட்டக்களப்பு படுவான் கரைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் கேட்ட பாரிய குண்டுச் சத்தங்களால் மட்டு.நகரும் அதன் புறநகர்ப் பகுதிகளும் சில மணிநேரம் செயலிழந்தன.
படுவான்கரை பகுதியில் அண்மைக் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டுகளை நேற்று முற்பகல் 11.30 மணியளவில் படையினர் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்தனர்.
இந்தச் சத்தங்கள் மட்டு.நகரையும் களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி போன்ற பிரதேசங்களையும் அதிரவைத்தன.
இதையடுத்து பலபகுதிகளிலும் மக்கள் சிதறியோடியதுடன் கடைகள், வர்த்தக நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. சந்தைகளிலிருந்து மக்கள் ஒட்டமெடுத்தனர்.
சுமார் அரைமணி நேரம் அனைத்துப் பகுதிகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இதன் பின் உண்மைநிலை தெரியவரவே நிலைமை வழமைக்குத் திரும்பியது.
No comments:
Post a Comment