Monday 31 March 2008

ஒரு ஆண் தாயாகிறார்(வீடியோ இணைப்பு)

அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.

ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.

பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.

பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com
எனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.

அந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்
விர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.

அதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்

'தமிழகத்தில் புலிகள் ஊடுருவல் இல்லை'

தமிழகத்தில் விடுதலை புலிகள் ஊடுருவல் இல்லை என்று, தமிழக காவல் துறையின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைவராக இதுவரை பதவி வகித்து வந்த ராஜேந்திரன் திங்களன்று பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அப்பதவிக்கு கே.பி. ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். தனது புதிய பொறுப்பை திங்களன்று அவர் ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கே.பி. ஜெயில் அளித்த பேட்டியில், தமிழக காவல்துறையை நவீனமயமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகச் சொன்னார்.
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாட்டினை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மின் ஆளுமை திட்டம் என்ற புதிய முறை அறிமுகமாக உள்ளது என்றார் அவர்.
தனக்கு தெரிந்த வரை தமிழகத்தில் விடுதலை புலிகள் அல்லது நக்சலைட்டுகளின் நடமாட்டமோ, ஊடுருவலோ இல்லை என்று, மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் கூறினார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரவுடிகளை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை ஒடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் டிஜிபி கே.பி. ஜெயின் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பாரியாரை உயிரழக்க செய்த ரூபவாஹினியின் மூன்று ஊழியர் பணி தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பிரதி பணிப்பாளர் சுமேத அத்துலசிறி, தயாரிப்பாளர் அமால் சமந்த, மற்றும் எழுதுவினைஞர் ஒருவரும் பணியில் இந்து இடைநீக்கம் செய்யப்பட்டுளளனர். ஜனாதிபதியின் பாரியாரின் தயாரின் மரண செய்திக்கு பின்னர், ஜனாதிபதியின் பாரியார் விபத்து ஒன்றில சிக்கியுள்ளதாக ரூபவாஹினியில் செய்தி வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக துறை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா, அமைச்சின் உதவி செயலாளரை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்த நியமித்திருந்தார். இந்த விசாரணை அறிக்கையின் பின்னரே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மூன்று பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுளளனர்.

கல்கமுவ தேக்குமர காட்டில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அம்பான்பொல காவல்துறை பிரிவில் உள்ள கல்கமுவ தேக்கு மர காட்டில் இருந்து இன்று (31-03) எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த தேக்கு மர காடு கல்கமுவ பிரதான வீதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் சுமார் 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவருடையது என காவல்துறையினர் தெரிவித்தனர். மஹாவ பிரதேச நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை நடத்தியிருந்தார். எரியூட்டப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை. அம்பான்வெல காவல்ததுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்னனர்.

மொபைல் போன்களால் உருவாகும் 'நோமொபோபியா'!

Cell phone
லண்டன்: மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர்.

இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.

கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு வருவதுதான் இந்த நோமொபோபியா.

நோ மொபைல் போபியா என்பதன் சுருக்கம்தான் நோமொபோபியா. மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இது வரும். மொபைல் போன்களை பயன்படுத்துவோரில் 53 சதவீதம் பேருக்கு இந்த மன வியாதி இருக்கிறதாம்.

மொபைல் போன்களோடு ஒட்டி உறவாடி வருவோருக்கு மட்டுமே இது வருகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது பேசும் நேரம் ஸ்டாக் இல்லாவிட்டாலோ அல்லது சாதனம் செயலிழந்து விட்டாலோ பெரும் மன அழுத்தம் ஏற்படுமாம். அதைத்தான் நோமொபோபியா என்கிறார்கள்.

மொபைல் போன் இல்லாமல் இவர்களால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதாம். ஏற்கனவே உள்ள பல்வேறு வகையான மன அழுத்தங்களை விட இந்த நோமொபோபியா பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பாக்ஸ் மில்ஸ் என்பவர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆண், பெண்களிடம் (அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள்) கருத்தாய்வு நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட ஆண்களில் 58 சதவீதம் பேரும், பெண்களில் 48 சதவீதம் பேரும் போனில்சார்ஜ் தீர்ந்து விட்டாலோ, சாதனம் செயல்படாமல் இருந்தாலோ அல்லது பேசும் நேரம் (டாக் டைம்) குறைவாக இருந்தாலோ பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் தவித்துப் போய் விடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கருத்தாய்வில் கலந்து கொண்டவர்ளில் மூன்றில் இரண்டு மடங்கு பேர், எப்போதும் மொபைல் போனில் பேசியபடியே இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது காதும், போனுமாகவே இருப்பவர்கள் இவர்கள்.

இத்தகைய பதட்டத்தைக் குறைக்க, மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்க, மன உளைச்சலைப் போக்க ஒரே வழி சாதனங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும், எப்போதும் சார்ஜில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். டாக் டைம் அதிகம் இருக்கும்படி அதை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மில்ஸ்.

எருமைகள் திடீர் ஆக்ரோஷம்-18 பேர் படுகாயம்

Buffaloes
சென்னை: கசாப்புக் கடைக்கு வெட்டுவதற்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடுகள் திடீரென ஆவேசமாகி சரமாரியாக தாக்கியதில் 18 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஒரு வியாபாரியின் உயிர் ஊசலாடி வருகிறது.

சென்னை புளியந் தோப்பில் ஆட்டுத் தொட்டி உள்ளது. அங்கு தினசரி இறைச்சிக்காக ஏராளமான ஆடுகளும், மாடுகளும் கொண்டு வரப்பட்டு வெட்டப்படும்.

சென்னை புறநகர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்கி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் பேட்டை, குண்டூர், நெல்லூர் பகுதிகளில் இருந்து எருமை மாடுகளைக் கொண்டு வந்து வெட்டுவார்கள்.

இந்த நிலையில் ஒரு லாரியில் 10 எருமை மாடுகளை கொண்டு வந்தனர். மாதவரம் 100 அடி சாலையில் லாரி வந்த போது லாரி பழுதாகிவிட்டது. எனவே மாடுகளை இறக்கி நடத்தி வந்தனர். 6 மாடுகளை ஒரே கயிற்றில் சேர்த்து கட்டி பிணைத்து இருந்தனர். மற்ற 4 மாடுகளை தனியாக ஒரு கயிற்றில் கட்டி இருந்தனர்.

அப்போது திடீரென அந்த மாடுகள் கயிறுகளை அறுத்து கொண்டு ஆவேசத்துடன் ஓடின. அப்போது எதிரே வந்த சரோஜா என்கிற 70 வயது பூ விற்கும் மூதாட்டியை ஒரு மாடு முட்டித் தள்ளியது.

இதில் அவரது முதுகு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது பல் உடைந்து ரத்தம் கொட்டியது. அங்கிருந்து அன்பழகன் தெரு வழியாக ஓடி ஊறுகாய் வியாபாரியை மாடுகள் குத்தி வீசின.

பலத்த காயமடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளா. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேபோல மேலும் 16 பேரையும் அந்த மாடுகள் முட்டித் தள்ளின. இதனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்தப் பகுதியே அல்லோகல்லப்பட்டது.

இந் நிலையில் கசாப்புக்கடைக்காரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை மடக்கினர். அவற்றை அவர்கள் அடித்து இழுத்துச் சென்ற காட்சி மிகப் பரிதாபமாக இருந்தது.

இலங்கை நாட்டவர்கள் நடுக்கடலில் கைது

இந்திய கடற்படை ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை நாட்டவர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
ரமேஸ்வரம் அருகே உள்ள உச்சிப்புலி கடல் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையைச் சேர்ந்த அன்ரன் (40) மற்றும் வாலண்டைன் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த படகையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், 3 குழந்தைகள் ஆகியோரை அரிச்சல் முனையில் சேர்த்துவிட்டு, தாயகம் திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை நாட்டவர்கள் பிடிபட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ

மார்ச் 31ல் 25 முதல் 54 வயது வரையில் உள்ள பெண்களுக்கான புதிய இணையதளத்தை யாகூ தொடங்கியுள்ளது.பெண்களை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த இணையதளம். இவ்விணைய தளத்தை தொடங்குவதற்கு முன்னரே யாகூ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்டறியப்பட்டது. தாய்மை,குடும்பபொறுப்பு, அழகு போன்ற பல கோணங்களில் சிந்தித்து செயல்படும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக யாகூவின் நிறுவன துணை அதிபர் யாமி லோரியோ கூறினார்
http://shine.yahoo.com/

துப்புரவு பெண் தொழிலாளிக்கு ரூ.9.60 கோடி பரிசு

பிரிட்டனில், துப்புரவு பெண் தொழிலாளிக்கு ஜாக்பாட் போட்டியில், ரூ.9.60 கோடி பரிசு கிடைத்துள்ளது. இந்த தொகையை, பக்கத்து வீட்டு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள போவதாக, துப்புரவு பெண் தொழிலாளி தெரிவித்துள்ளார். பிரிட்டனில், ஹாமில்டன் என்ற இடத்தில் வசிப்பவர் சொராயா லோவெல்(38); நான்கு குழந்தைகளுக்கு தாய். துப்புரவு பணி செய்து வருகிறார். இவருக்கு ஜாக்பாட் போட்டியில், ரூ.9.60 கோடி பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து சொராயா கூறியதாவது:எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் அக்னஸ் ஓ நீல்(68). ஜாக்பாட் போட்டியில் நான் பங்கேற்ற போது, அவர் உடன் இருந்தார். எது கிடைத்தாலும் அதை, அக்னசுடன் பகிர்ந்து கொள்வேன். இப்போதும் பரிசு தொகையை அவருடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். இவ்வாறு சொராயா கூறினார். அக்னஸ் கூறுகையில்,சூ மூன்று ஆண்டுகளாக, நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். என்னை கவனித்து கொள்ள, எனது கணவர் முன்கூட்டியே, பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, என்னை கவனித்து கொண்டவர் சொராயா தான்’ என்றார். கோடிக்கணக்கில் பரிசு தொகை கிடைத்தாலும், தொடர்ந்து துப்புரவு பணியை மேற்கொள்ள போவதாக, சொராயா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் தமிழ் தியேட்டர்கள் மீது தாக்குதல்

Bangalore
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர்.

மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் இருட்டடிப்பு செய்யப்படும் என கன்னட ரக்சன வேதிகே என்கிற கன்னட வெறியர் அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கு நேற்று சென்னையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஓகனேக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் இன்று பெங்களூரில் வன்முறையில் குதித்தனர். சேஷாத்ரிபுரம் பகுதியில் குவிந்த அவர்கள் அங்குள்ள நடராஜ் மற்றும் வினாயக் ஆகிய தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தியேட்டர்களுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து உடைத்தனர். தியேட்டர் இருக்கைகளையும் கிழித்தெறிந்தனர்.

பின்னர் அருகில் உள்ள கடைகளுக்குள் புகுந்த அக்கும்பல் அங்கு தமிழர்கள் வைத்துள்ள கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சேஷாத்ரிபுரம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Sunday 30 March 2008

தமிழகத்தில் சிங்களவர்களின் கால்பதிக்கக்கூடாது என பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலர் விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய தமிழகத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீலங்காவின் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் தலைமையில் வந்த முக்கிய பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள பேரூர் கிராமம்திருநெல்வெலியின் ஆலன்குளம் போன்ற இடங்களில் பௌத்த ஆலயங்களுக்கான அடிக்கல்லை நாட்ட வந்திருந்தனர்.

பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரமல்லாமல்அனைவருக்கும் மனிதாபிமானத்தை உணர்த்துகிறது என இதன் போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியார் திராவிட கழகத்தினர்குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். இதனையடுத்து இந்த நிகழ்வை தமிழகத்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் வின் டிவியின் செய்தியும் செய்திபார்வையும் என்ற நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர்.டி எஸ் எஸ் மணிகடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் பௌத்த அட்டையை பயன்படுத்தி தமிழர்களை பிரிக்க முயற்சிக்கிறது என அவர் குற்றம் சுமத்தினார். இதற்கு உதாரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் சிங்கள பேரினவாதிகளான ஜாதிக ஹெல உறுமயவும் அங்கம் வகிப்பதாக மணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜெயலத் ஜெயவர்த்தன ஒரு கிறிஸ்தவராக உள்ளபோதும் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமையானது அரசியலை முன்னிலைப்படுத்திய செயலாகும் என வின் டிவி ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்

எனினும் இதனை மறுத்துள்ள ஜெயலத் ஜெயவர்த்தன தான் ஸ்ரீலங்காவிலும் தமிழர்களுக்கு சார்பாக செயற்படும் ஒருவன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள விடுதலை ராஜேந்திரன் தான் பௌத்தத்திற்கு எதிரானவன் அல்ல என்ற போதும் சிங்கள பிக்குகளுக்கு எதிரானவன் எனக்குறிப்பிட்டுள்ளார்

லண்டனில் விமான விபத்து: 5 பேர் பலி

லண்டலினில் தனியார் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். பிரான்ஸ் விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட தனியார் விமானத்தில் இரண்டு பைலட்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பயணிகள் இருந்தனர். இந்த விமானம் லண்டன் பகுதியில் பறந்த போது, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர். இது தவிர விமானம்‌ விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.

கேரளாவில் உருவாகிறது மிதக்கும் கிராமம்

உலக படகு போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்காக கேரளாவில் தண்ணீரில் மிதக்கும் கிராமம் உருவாக்கப்படுகிறது. வால்வோ ஓஷன் ரேஸ் என்ற பெயரில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக படகு போட்டி நடைபெறும். அந்த போட்டி அக்டோபர் மாதம் ஸ்பெயினில் உள்ள அலிகான்டி என்ற துறைமுக நகரில் இருந்து துவங்குகிறது. மொத்தம் 11 துறைமுக நகரங்களை தொட்டு, 39 ஆயிரம் கடல் மைல்களை கடந்து செயிண்ட் பீட்டர் பர்க் நகரில் இந்த போட்டி முடிவடைகிறது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகத்தையும் தொட்டுச்செல்கின்றனர். உலக படகு போட்டியில் பங்கேற்பவர்கள் டிசம்பர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை கேரளாவில் தங்கவுள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தண்ணீரில் மிதக்கும் கிராமத்தை உருவாக்கி வருகிறது கொச்சி துறைமுக கழகம்.

அதிக மதிப்பெண் கிடைத்தும் பலன் இல்லை வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறிய என்ஜினீயர் கைது

வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறி சென்னை கல்லூரியில் நள்ளிரவில் புகுந்து கத்தியுடன் கலாட்டா செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவில் கலாட்டா
சென்னை கடற்கரையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி ரசாயன ஆய்வுக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கருங்கல்லால் அவர் பூட்டை உடைக்க முயற்சித்த போது எழுந்த சத்தம் கேட்டு, கல்லூரி காவலாளி விரைந்து சென்று அவரை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார்.

"நான் முதல் வகுப்பில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனக்கு வேலை இல்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறான். எனக்கு வேலை கொடுக்காத கம்பெனிகளை குண்டு வைத்து தகர்க்கப்போகிறேன். குண்டு செய்வதற்காக, ரசாயன பொருள் திருடுவதற்காகவே இங்கு வந்தேன்'' என்று அந்த வாலிபர் ஆவேசமாக பேசினார். அவர் போதை மயக்கத்தில் இருந்தார். உடனே இது பற்றி கல்லூரி காவலாளி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ராமசுப்பிரமணி, உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் மோகன், தியாகராஜன் ஆகியோர் உடனடியாக போலீஸ் படையுடன் பிரசிடென்சி கல்லூரிக்கு சென்றார்கள். அதற்குள் கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட வாலிபர் தப்பி சென்று விட்டார். அவரை திருவல்லிக்கேணி பகுதியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

என்ஜினீயர்

அவரை அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. அவரது பெயர் சந்திரசேகரன் (வயது 24). திருச்சி அருகே உள்ள சமயபுரத்தை அடுத்த நரசிம்ம மங்கலம் இவரது சொந்த ஊராகும். எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை கிடைக்காத விரக்தியில் மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார்.

சென்னை பூந்தமல்லியில் அவரது நண்பருடன் அறை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார். மன உளைச்சலில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அங்கு காற்று வாங்கிவிட்டு திருவல்லிக்கேணி சென்று மது அருந்தி உள்ளார். போதை மயக்கத்தில் பிரசிடென்சி கல்லூரிக்குள் நுழைந்து திருட முயற்சித்து உள்ளார். தனது குடும்பச் சொத்தை தனது தந்தையை ஏமாற்றி, உறவினர்கள் அபகரித்து விட்டதாகவும், தந்தையை ஏமாற்றிய உறவினர்களை குளோராபாம் மயக்க மருந்து கொடுத்து கடத்த திட்டமிட்டதாகவும், குளோரோபாம் மயக்க மருந்து திருடவே, கல்லூரிக்குள் நுழைந்ததாகவும், அந்த வாலிபர் கதை விட்டார்.

தீவிரவாதியா?

மேலும் அந்த வாலிபர் நக்சலைட்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், போலீசாரிடம் பேசியுள்ளார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பூந்தமல்லியில் அவர் தங்கி இருந்த அறையை சோதனை போட்டனர். அவரது நண்பரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர் தீவிரவாதியாகவோ அல்லது தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவோ செயல்பட்டதற்கான எந்த தடயங்களும், ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

கைது

வேலை கிடைக்காத விரக்தியில்தான், அவர் போதையில் கல்லூரிக்குள் நுழைந்து திருட முயற்சித்து ரகளையிலும் ஈடுபட்டு உள்ளார், என்று போலீஸ் விசாரணையில் உறுதியானது. இதையொட்டி, கல்லூரிக்குள் நுழைந்து ரகளை செய்த குற்றத்துக்காக என்ஜினீயர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார்.

அவரது தந்தை பெயர் வெங்கடாசலபதி. நெசவுத் தொழில் செய்கிறார். ஒரு அண்ணனும், தங்கையும் உள்ளனர். சந்திரசேகரன் மீது திருட்டு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார், என்றும் போலீசார் தெரிவித்தனர்.

ஈராக்கில் தொடரும் மோதல்களில் 130 பேர் பலி பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்(வீடியோ இணைப்பு)

ஈராக் பாதுகாப்புப் படையினருக்கும் ஸியா ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் பாக்தாத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமையிலிருந்து நாளை மாலை 5 மணிவரை அமுலில் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தென்பகுதியிலுள்ள பஸ்ரா நகரில் ஆரம்பித்த மோதல்களில் இதுவரை 130 பேர் பலியாகியுள்ளதுடன், இம் மோதல்கள் பாக்தாத்திற்கும் பரவியுள்ளன. ஸியா மதகுரு மொஹ்டாடா சத்ரின் தலைமையில் இயங்கும் மெஹ்தி இராணுவக் குழுவுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பஸ்ராவில் கடும் மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்நெருக்கடி நிலைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு சத்ர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈராக்கில் நிலவும் இரத்தக் களறி நிலமைக்கு அமைதி முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குமே தாம் விரும்புவதாக சத்ரின் உதவியாளரால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளை தேவையான அளவு காலத்திற்கும் தொடரப் போவதாக அந்நாட்டுப் பிரதமர் நூரி மாலிக் உறுதியெடுத்துள்ளார்.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதற்கு ஒரு முடிவு காணப்படும் வரை எமது நடவடிக்கைகள் தொடரும். பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லையென மாலிக் தெரிவித்துள்ளார்.

பஸ்ரா நகர் நடவடிக்கைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்திவரும் மாலிக், சுமார் 30,000 இராணுவத்தினரையும் பொலிஸாரையும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, மக்கள் செறிந்து வாழும் சில பகுதிகளை மெசந்தி இராணுவக் குழுக்கள் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன.

இந்நிலையில் பஸ்ரா வன்முறைகளை பிரதமர் மாலிக் கையாளும் விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி புஷ் மாலிக்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாக்தாத்திலுள்ள அதிகூடிய பாதுகாப்பு வலயமான கீறின் பீஸின் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களினால் அதிகளவான அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர்.

நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் வரை அப்பகுதியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பஸ்ரா நகரிலுள்ள ஈராக்கின் இரு பிரதான எண்ணெய் விநியோகக் குழாய்கள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளமையால் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

பஸ்ரா நகரில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களின் அளவு வரவர அதிகரித்து வருவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.


அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்: ஆப்பிள் திட்டம்

ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அதிவேக ஒயர்லெஸ் ஐ-போனை, நடப்பாண்டின் 2ம் காலாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பேங்க ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மூன்றாம் தலைமுறை ஐ-போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஆப்பிள் நிறுவனம், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 8 மில்லியன் அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கூறியுள்ளது.
இத்தகவல் வெளியானதும் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை இன்று 2.76 டாலர் உயர்ந்து 143 டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் முன்னணி தகவல்தொடர்பு நிறுவனமான ஏடி&டி பங்குகளின் மதிப்பு 38.39 டாலர் என்ற அளவில் இருந்து 37.66 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனம் சார்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் அமைச்சரவையில் மேலும் ஒரு தமிழருக்கு இடம்

சிங்கப்பூர் அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவருக்கு முக்கிய இலாகா அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அமைச்சரவையை அந்நாட்டு பிரதமர் லீ சீயன் லூங் மாற்றியமைத்துள்ளார். இளம் வயதினருக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் 49 வயதான கே.சண்முகம் என்ற அரசு வக்கீல், சட்ட அமைச்சராகவும் உள்துறை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது துணைப் பிரதமராகவும், சட்ட அமைச்சராகவும் உள்ள ஜெயக்குமாரிடமிருந்து சட்டத்துறையை மே மாதம் 1ம் தேதி சண்முகம் ஏற்றுக்கொள்கிறார். ஜெயக்குமார் தொடர்ந்து துணைப் பிரதமராகவும், தேசிய பாதுகாப்புக் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் செயல்படுவார்.

இவர்கள் இருவர் தவிர டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தர்மன் சண்முகரத்தினம் ஆகிய தமிழர்களும் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர்.

விவியன் பாலகிருஷ்ணன் சமூக வளர்ச்சி, இளைஞர் நலம், விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

தர்மன் சண்முகரத்னம் நிதியமைச்சராக இருக்கிறார்.

சட்டத்துறையை கடந்த 20 வருடங்களாக ஜெயக்குமார் தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1988ல் இருந்து எம்.பி.யாக பதவி வகிக்கும் ஜெயக்குமாரும், சிங்கப்பூர் மூத்த அமைச்சர் கோ சோக் டாங் ஆகியோர் தற்போது அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தவார உலகம் ஒரு வீடியோ பார்வை!!!!

இந்தவார உலகம் கேட்க கேட்க பரவசம்!!!!!!!

அமெரிக்கா, ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய முத்தரப்பு ராணுவ உளவு மையம்

அமெரிக்கா, ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய முத்தரப்புகள் கலந்துகொள்ளும் முதலாவது கூட்டு ராணுவ உளவு மையம் நேற்று, ஆப்கான்-பாகிஸ்தான் எல்லை பிரதேசத்தில் நிறுவப்பட்டது.

இது, மைல்கல்லான முன்னேற்றமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் உளவாளிகள், தகவல்களை பகிர்ந்து கொண்டு, சட்டவிரோத ஆயுத நடவடிக்கைகளை கூட்டாக ஒடுக்குவதில் முதல் முயற்சி இது என்று ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதி கரிமி கூறினார்.

பாகிஸ்தானின் ராணுவ பிரதிநிதியும், வடமேற்கு பிரதேசத்தின் தலைமை தளபதியுமான முகமெட் மசூத் அலாம் பேசுகையில், பயங்கரவாத எதிர்ப்பு என்பது, முழு உலகத்தின் பொது நலனுக்குப் பொருந்தியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமாகியது என்று குறிப்பிட்டார்.

நிர்வாணப்படுத்தி ராமேஸ்வரம் மீனவர்களை சித்திரவதை செய்த கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்களைப் பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்தும், நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியும் சித்திரவதை செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் விசைப் படகு என்ஜினை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தி விட்டுச் சென்ற சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் செய்யும் வகையில் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது இலங்கை கடற்படை.

குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரிடம் தினசரி சிக்கி படாதபாடு பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் ஒரு கொடுமையை அரங்கேற்றியுள்ளது இலங்கை கடற்படை.

நேற்று மாலை கச்சத்தீவு அருகே 400க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப் படகுகளில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.

தமிழக மீனவர்களின் சில படகுகளை மட்டும் பிடித்துக் கொண்டனர். மற்றவர்கள விரட்டி விட்டனர். பின்னர் பிடிபட்ட படகுகளில் இருந்த மீனவர்களை அடித்தனர். பிறகு அவர்களை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தினர்.

பிறகு மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலில் வீசினர். மீனவர்களின் வலைகளையும் துண்டித்து சேதப்படுத்தினர்.

பின்னர் கிளம்பிச் செல்வதற்கு முன்பு மீனவர்களின் படகுகளின் என்ஜின்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து என்ஜின்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

பின்னர் கடற்படையினர் அங்கிருந்து சென்றவுடன் தீயை அணைத்த மீனவர்கள் அங்கிருந்து தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பும், கொந்தளிப்பும் நிலவுகிறது.

ஓய்வே எடுப்பதில்லை பின்லேடன் மிகவும் சுறு சுறுப்பானவர்: உதவியாளர் பேட்டி

சர்வதேச தீவிரவாதி அல்-கொய்தா இயக்க தலைவன் பின்லேடனை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டுகளாக வலைவீசி தேடி வருகிறது. ஆனாலும் பின்லேடனை பிடிக்க முடிய வில்லை. பின்லேடனிடம் முன்பு 1996 முதல் 2000-வது ஆண்டு வரை உதவியாளராக இருந் தவர் நாசர் அல் பாக்கிரி. 35 வயதான பாக்கிரி இப்போது பின்லேடனை விட்டு விலகி ஒமன் நாட்டில் டாக்சி டிரைவ ராக இருக்கிறார். பாக்கிரியை ஒப்படைக்கும்படி அமெரிக்க உளவுத்துறையும் போலீசாரும் வற்புறுத்தியும் ஒமன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் பின்லேடன் பற்றியும் அவனிடம் பணி யாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றியும் பாக்கிரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் பாக்கிரி கூறியிருப்பதாவது:- பின்லேடன் பற்றியும் அவனது நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உளவுத் துறை தகவல்களை பெற முயற்சி செய்தது. ஆனால் அவர் களது நடவடிக்கைகள் பற்றி பின்லேடனுக்கு முன் கூட்டியே தெரிந்து விடும். பின்லேடன் தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். காலையில் எழுந்த தும் தொழுகை நடத்துவார். சவூதி அரேபியாவில் பிறந்த நான் எனது 23 வயதில் தீவிர வாத இயக்கத்தில் சேர்ந்தேன். எங்கள் தலைவர் பின்லே டனின் மெய்காப்பாளராக பணியாற்றி வந்தேன். ஆப் கானிஸ்தான் போரின்போது அல்-கொய்தா இயக்கத்துடன் சேர்ந்து போரிட்டேன். இரவு வரை தொழுகை நீடிக்கும்.இடையே முக்கிய பிரமுகர் கள் சந்திப்பு நடக்கும். அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. எப்போதும் சுறு சுறுப்பாக இருப்பார். ஏதாவது திட்டங்கள் தீட்டிக்கொண்டே இருப்பார். அவரது நடவடிக்கை களை யாரும் தடுக்க முடி யாது. 1990 முதல் அவரை பாதுகாக்கும் பணியில் நான் ஈடுபட்டேன். அவரது முட்டை முடிச்சுகளை நான் சுமந்து செல்வேன். செயற்கைகோள் மூலம் தகவல் தொடர்புகளை கவனித்து அதை பின்லேடனிடம் தெரிவிப்பேன்.

பின்லேடனிடம் நான் உதவியாளராக இருந்தபோது யாரையும் நான் சுட்டுக்கொல்ல வில்லை. “எதிராளிகளிடம் சிக்கிக் கொண்டால் என்னை சுட்டுக்கொன்று விட வேண்டும் என்று தனது உதவியாளர் களுக்கு பின்லேடன் உத்தர விட்டு இருந்தார். நல்லவேளை யாக எனக்கு அந்த துரதிர்ஷ்ட மான நிலை ஏற்படவில்லை.

முன்பு பின்லேடனை பார்க்க வந்த ஒருவர் அவரிடம் தகராறு செய்ததுடன் அவரை அவமதித்தார். நான் அவரை மடக்கி பிடித்து விட்டேன். அவரை மன்னித்து விட்டு விடும்படி பின்லேடன் என்னிடம் கூறினார். இவ்வாறு நசார் அல் பாக்கரி கூறினார்.

Saturday 29 March 2008

புலிகளின் நவீன ஷ்ரெல்த் ரக தாக்குதல் கலம்

ராடர்களின் திரைகளில் தெரியாத விடுதலைபுலிகளின் ந‌வீன ஷ்ரெல்த் ரக தாக்குதல் கலம் கரும்புலி தாக்குதலை நடத்தியதா???

கடற்படயினரின் ந‌வீன ரக தாக்குதல் படகு கடலடித்தாக்குதல் மூலம் திடீரென்று
வெடித்து சிதறியது!!!!

நாயாறு கடற்பரப்பில் இடம்பெற்ற்தாக்குதல் நீர்மூள்கிக் கப்பலின் தாக்குதலாக இருந்தால் அது அரசின் கப்ப்ல் வர்தகத்துறையிலும் படயின்ருக்கான வினியோக‌
வளியிலும் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது!!!!!!!!!!!!
click the image to see good

தரைவளிப் பாதயை திற‌க்க படையினரும்,கடல் வளி பாதையை மூட புலிகளும்

doubble click on the image to see friends

தண்ணீர் இல்லாததால் பெண் தர மறுப்பு; ஆண்கள் தவியாய் தவிப்பு! கிராமத்தில் “டும் டும்’ நடந்து 15 ஆண்டாகிறது

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 15 ஆண்டாக குடிநீர் இல்லாததால்,பெண் தர மற்ற கிராமத்தினர் மறுத்து வருகின்றனர். இதனால், 25 வயது முதல், 40 வயதுள்ள ஆண்கள், பிரம்மச்சாரியாக “விரக்தி’யில் உள்ளனர். குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அருகே உள்ளது சாய்லா கிராமம். இந்த கிராமத்தில் 15 ஆண்டாக குடிநீர்ப் பிரச்னை தீராமல் உள்ளது. 5 கி.மீ., தூரம் சென்று தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும். இதனால், பக்கத்தில் உள்ள 75 கிராமங்களில் உள்ள குடும்பத்தினர், இந்த கிராமத்தினருக்கு பெண் தர மறுத்து வருகின்றனர். இதனால்,15 ஆண்டாக, இந்த கிராமத்தில் திருமணங் களே நடக்கவில்லை. 25 வயது முதல், 40 வயதுள்ள ஆண்கள், நூற்றுக்கணக்கான பேர் திருமணம் செய்ய வழியில்லாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகின்றனர். கிராமத்தில், பிராமணர், படேல், ஜெயின் இனத்தை சேர்ந்த மக்கள் குடியிருக்கின்றனர். குடிநீர்ப் பற்றாக்குறை தலைவிரித்தாடியதை அடுத்து, கிராமத்தை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. கிராமத்தில் ஜனத்தொகை 16 ஆயிரமாக இருந்தது, இப்போது 10 ஆயிரமாக குறைந்துவிட்டது. கிராமத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதும், வசதி படைத்தவர்கள் வெளியேறி விட்டனர். குடிநீர் இல்லாத கிராமத்தில் இருந்து வெளியேறி, வேறு கிராமத்தில் குடியேறினால், பெண் கொடுப்பதாக சொன்னதால், பிள்ளையை பெற்றவர்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால், கூலித்தொழில் செய்யும் குடும்பத்தினரால் வெளியேற முடியவில்லை; இதுகுறித்து பாதிக்கப் பட்ட ஆண்கள் கூறுகையில், “நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டோம். ஆனால், அரசு அதிகாரிகள் எட்டிக்கூட பார்ப்பதில்லை. குடிநீர் பிரச்னையால், எங்களின் வாழ்க்கையே பறிபோய் விட்டது’ என்று புலம்பினர்.

உள்ளூர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். “நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்பதால் இந்த பிரச்னையை சட்டசபையில் எழுப்பலாமே தவிர, என்னால் வேறு எதையும் செய்ய முடியாது’ என்றார். நர்மதா அணை திட்டம் நிறைவேறும் போது, சியாலா கிராமத்தின் குடிநீர் பிரச்னை தீர்ந்து விடும் என்று அரசு கூறியுள்ளது. அதனால், இன்னும் இரண்டாண்டு வரை இந்த கிராமத்து இளைஞர்களுக்கு திருமணம் நடப்பது கேள்விக்குறி தான்.

இணையதளத்தில் வெளியிடப்பட்ட குரானுக்கு எதிரான படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு தீவிரவாதி மிரட்டல்(வீடியோ இணைப்பு)

முஸ்லிம்களின் புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியரை விடுவிக்க முடியாது

மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியரை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என்று மலேசிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கைது
மலேசியாவில் வெள்ளையர் ஆட்சியின்போது தோட்ட தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள், பல தலைமுறைகளாக அங்கு வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். அவர்களை மலேசிய போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

இந்த போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த இந்து நடவடிக்கை உரிமைப்படையைச் (ஹிண்ட்ராப்) சேர்ந்த 5 முக்கிய தலைவர்களை மலேசிய அரசு, உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த சட்டப்படி, யாரை வேண்டுமானாலும் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அதன்படி, இவர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி

இந்நிலையில், கடந்த 8-ந் தேதி மலேசிய பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், சிறையில் உள்ள 5 பேரில் ஒருவரான வக்கீல் எம்.மனோகரனை ஜனநாயக நடவடிக்கை கட்சி என்ற எதிர்க்கட்சி, வேட்பாளராக நிறுத்தியது. இக்கட்சிதான், மனோகரன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மனோகரனுக்காக அவரது மனைவி புஷ்பநீலா, தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில் மலேசிய இந்தியர்களின் பலத்த ஆதரவால், மனோகரன் வெற்றி பெற்றார். எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை, மலேசிய அரசு இன்னும் சிறையில் இருந்து விடுவிக்கவில்லை.

மனோகரனை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும், வக்கீல் அமைப்புகளும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. மனோகரனை விடுதலை செய்யக்கோரும் வழக்கில் ஏப்ரல் 2-ந் தேதி அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே, மனோகரனை அரசு விடுவிக்க வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுவிக்க முடியாது

ஆனால் இந்த கோரிக்கைகளை மலேசிய அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து மலேசிய உள்துறை மந்திரி சையது ஹமீது அல்பர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை நாங்கள் அப்படியே ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும்தான் நாங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டி இருக்கிறது. கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 5 பேரும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் என்ற நிலை தோன்றும்போதுதான், அவர்களை விடுதலை செய்வது பற்றி நாங்கள் பரிசீலிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஷாஜகானின் தங்க வாள் ஏலம் ரூ.4 கோடி கிடைக்கும் என கணிப்பு

17-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் ஷாஜகான். இவர் தனது மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மகாலை கட்டினார். ஷாஜகான் பயன்படுத்திய தங்க முலாம் பூசப்பட்ட அவரது உடைவாள், லண்டனில் ஏப்ரல் 10-ந் தேதி ஏலம் விடப்படுகிறது. இந்த வாளை பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஜவுளி அதிபர் ஜாக்ïஸ் டெசன்பான்ஸ் வைத்திருந்தார். அவர் இறந்ததை தொடர்ந்து, இந்த வாள் உள்பட அவர் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்படுகின்றன.


இந்த வாளில் ஷாஜகான் வாங்கிய பட்டங்கள், அவர் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் ஆகியவை எழுதப்பட்டுள்ளன. இந்த வாள் 5 லட்சம் பவுண்டுகளுக்கு (ரூ.4 கோடி) ஏலம் போகும் என்று கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் சிறந்த மனிதர்' அமெரிக்காவில் மீரா நாயருக்கு விருது

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் `இண்டியா அப்ராட்' என்ற இந்திய பத்திரிகையின் விருது வழங்கும் விழா, நிïயார்க் நகரில் நடைபெற்றது. அதில், இந்தியாவில் பிறந்து உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர் மீரா நாயருக்கு `இந்த ஆண்டின் சிறந்த மனிதர்' என்ற விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு இவ்விருதை பெற்றிருந்த பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, இவ்விருதை மீரா நாயருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Friday 28 March 2008

ஊழியர்களைத் தக்க வைக்க புது உத்திகளை கையாளும் அமெரிக்க நிறுவனங்கள்

பணமே வாழ்க்கையல்ல!: ஊழியர்களைத் தக்க வைக்க புது உத்திகளை கையாளும் அமெரிக்க நிறுவனங்கள்

நியூயார்க், மார்ச் 27: அமெரிக்க பொருளாதாரம் மந்தகதியில் உள்ளதாலும், ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க முடியாததாலும் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள அமெரிக்க நிறுவனங்கள் புது உத்திகளை கையாளத் தொடங்கியுள்ளன.

நிறுவனத் தலைவர்களிடம் நிர்வாக செயல் திட்டம் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

"பணமே வாழ்க்கையோ அல்லது முடிவோ அல்ல' என்பதைப் புரிய வைக்க நிறுவனம் தொடர்பாக முடிவெடுப்பதில் ஊழியர்களையும் பங்கு கொள்ள வைக்கத் தொடங்கியுள்ளனர்.

"தலைமை நிர்வாகிகள் தங்களுடன் திறந்த மனதுடன் பேசுதல், உரிய அங்கீகாரம் அளித்தல், முடிவெடுப்பதில் பங்கு ஆகியவற்றுக்கே ஊழியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வரக்கூடிய சில மாதங்களில் இந்த விஷயங்களுக்கே அதிக கவனம் கொடுக்கப் போவதாக சில நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பணரீதியான ஆதாயத்தை விட திறந்த மனதுடன் பேசுதல் அதிக பலன் அளிக்கும்' என அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாகக் கூறுகிறார் கலிபோர்னியாவின் வாலென்சியாவில் உள்ள வான்டேஜ் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மைய முதல்வர் ஆலன் ஹாப்ட்ஃபெல்ட்.

ஊழியர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்ற பணிச் சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் அது பண ஆதாயத்தைவிட அதிக பலன் தரும் என்பது தெளிவு என்கிறார் அவர்.

பணரீதியாக அல்லாமல் ஊழியர்களை மற்ற வழிகளில் ஊக்குவிப்பது அவசியம் என்பதை நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர் என்கிறார் நிர்வாக செயல் திட்டத் தலைவர் லீ பிராஸ்சீசர். ஊழியர்களுக்கு தகுந்த அங்கீகாரம் அளித்தால் அவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறுவதில்லை. தான் வேலை செய்யும் நிறுவனத்தில் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழி உள்ளது என்பதும் ஊழியர்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது என்கிறார். முன்னேற்றத்துக்கு தெளிவான வழி, எதிர்காலம் குறித்து தெளிவு ஆகியனவும் திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக நிறுவனத்தின் இலக்கு, நிறுவனத்தின் வெற்றி, அதில் ஊழியர்களது பங்கு ஆகியவை குறித்து தெளிவாகப் புரியவைப்பதும் ஊழியர்களைத் தக்கவைக்க தலைமை நிர்வாகிகள் மேற்கொள்ள உள்ள உத்திகளில் அடங்கும் என்கிறார் லீ பிராஸ்சீசர்.

தசாவதாரம் தீபாவளியன்று கலைஞர் டிவியில்

கமலின் பிரமாண்டமான தசாவதாரத்தை வாங்க கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. கலைஞர் டி.வி. நிர்வாகத்தினரும் தசாவதாரம் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. தசாவதாரம் கலைஞர் டி.வியில் தீபாவளி அன்று ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மல்லிகா ஷெராவத், ஜெயப் பிரதா, நெப்போலியன், சந்தான பாரதி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக் கின்றனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார்.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிக செலவில் இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலும் படப்பிடிப்பு நடந்தது. மலேசியாவில் 20 அமெரிக்க அழகிகளுடன் கமலும், மல்லிகா ஷெராவத்தும் நடனமாடும் காட்சியொன்றும் ஆடம்பர நடன கிளப் ஒன்றில் படமாக்கப்பட்டது.
747 ஜெட் விமானத்துக்குள் கமலஹாசன் ஊடுருவும் காட்சி யொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந் துள்ளது.
இதற்கிடையே படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் தள்ளிப் போயிருக்கிறது. சுதந்திர தின சிறப்பாக கமலின் தசாவதாரம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவில் மதுபானங்களில் பாம்புகளை ஊறவைத்து விற்பனை செய்யும் நபர் கைது

பாம்புகளை மதுபானங்களுக்குள் ஊறவைத்து, வினோத விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிழக்காசிய நாடுகளில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மருத்துவப் பொருளாக பயன் படுத்துப்படுகின்றன. இதுபோன்ற ஊரும் பிராணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகைகளுக்கு வியட்நாம் போன்ற நாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் பாம்புப் பண்ணை நடத்திவரும் போப்பல்வெல் என்ற நபர், ஊரும் சாரைப் பாம்புகளை ஓட்கா மதுவில் ஊறவைத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கினார். இத்தகைய மதுவகைகள் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி விற்பனை செய்து வந்த போப்பல்வெல்லை போலீசார் கைது செய்தனர். இறந்த சிறிய ரக சாரைப் பாம்புகளை ஓட்கா மதுவுடன் அவர் விற்பனை செய்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது பாம்புப்பண்ணையில் இருந்து ஏராளமான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அமெரிக்காவில் 2 இந்திய ராணுவ வீரர்கள் 'எஸ்கேப்'

Soldier
கலிபோர்னியா: கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய வீரர்களில் 2 பேரை பத்து நாள்களாகக் காணவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய ராணுவ வீரர்களின் கூட்டுப்பயிற்சி முகாம் நடக்கிறது.

இதில் பங்கேற்ற வீரர்களில் சஞ்சய் மஹதோ, சந்தோஷ் தாபா ஆகிய வீரர்கள் அங்கிருந்து மாயமாகிவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போய் 10 நாட்களுக்கு மேலாகிவிட்டதால், பணியில் இருக்கும்போது 'தகவல் தராமல் விடுப்பில் சென்றுள்ளதாக' அவர்கள் கருதப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காணாமல் போன வீரர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்ளூர் போலீசாரை தூதரக அதிகாரிகள் அணுகியதையடுத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கடந்த 2005ல் முதன்முறையாக பெண்டில்டன் ராணுவ தளத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து 2006ல் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க மெரைன் படை வீரர்கள் கர்நாடக மாநிலம் பெல்காம் ராணுவ முகாமில் இந்திய வீரர்களுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தற்போது பெண்டில்டன் தளத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி எடுப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள்

சென்னை, திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பருத்தி வீரன் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் 2007ம் ஆண்டு முதல் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 2007ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2007ம் ஆண்டின் சிறந்த படமாக பருத்தி வீரனும், சிறந்த இயக்குநராக அமீரும், சிறந்த நடிகராக சத்யராஜும், சிறந்த நடிகையாக பிரியா மணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுகள் விவரம்:

சிறந்த படம் - பருத்தி வீரன்.
சிறந்த நடிகர் - சத்யராஜ் (ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார்)
சிறந்த நடிகை - பிரியா மணி (பருத்தி வீரன்)
சிறந்த இயக்குநர் - அமீர் (பருத்தி வீரன்)
சிறந்த கதாசிரியர் - ராம் (கற்றது தமிழ்)
சிறந்த திரைக்கதாசிரியர் - வெங்கட் பிரபு (சென்னை 28)
சிறந்த வசனகர்த்தா - விஜி (மொழி)
சிறந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா ( பல படங்கள்)
சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் (பல படங்கள்)

விருது வழங்கும் விழா மே மாதம் பிரமாண்ட அளவில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் தேதி, இடம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் சங்க நிறுவனர் அய்யப்ப பிரசாத் மற்றும் தலைவர் தமிழன்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம

தலைநகர் டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு ஓடினர்.

டெல்லியில் இன்று மதியம் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 விநாடிகளுக்கு நீடித்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பொருட்கள் ஆடின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர். மக்களிடம் பெரும் பீதி காணப்பட்டது.


நிலநடுக்கத்தின் அளவு, அதன் மையம் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.

Thursday 27 March 2008

திருமணத்தில் ஆர்வம் இல்லாத பிரிட்டன் மக்கள்!

திருமணம் செய்து கொள்வதில் இங்கிலாந்துக்காரர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறதாம்.

இங்கிலாந்து தேசிய புள்ளியியல் துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தற்போது உள்ள மக்கள் தொகையில் பாதியளவுக்கும் சற்றே கூடுதலாக கடந்த 1895ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு கால கட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான திருமணங்கள் நடந்த ஆண்டு 2006 தான்.

அந்த ஆண்டில் 1000 பேரில் 10 பேர் மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆண்களில் 100 பேருக்கு 22.8 பேரும், பெண்களில் 20.5 பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமண சராசரி விகிதம் முதன் முதலில் 1862ம் ஆண்டுதான் கணக்கிடப்பட்டது. அந்த ஆண்டில், ஆண்களின் திருமண சராசரி 58.7 ஆகவும், பெண்கள் விகிதம் 50 ஆகவும் இருந்தது.

2ம் உலகப் போரின்போது பெண்களின் திருமண சராசரி விகிதம் 40க்குக் கீழ் குறைந்ததில்லை. அது 1995ம் ஆண்டு 30க்கும் கீழாக குறைந்தது. இதுதான் முதன் முதலில் ஏற்பட்ட கணிசமான குறைவு விகிதம் ஆகும்.

ஓய்வு பெறும் வயதை ஒட்டிய 4 பெண்களில் ஒருவர் ஆண் துணையுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார். முதன் முதலில் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண், பெண்களின் வயது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. ஆண்களைப் பொறுத்தவரை குறைந்தபட்ச வயது 32 ஆகவும், பெண்களுக்கு 30 வயதாகவும் உள்ளது.

பெரும்பாலான இங்கிலாந்துக்காரர்கள் தனித்தும், தேவையானால் சேர்ந்து வாழ்வதும், விருப்பம் இல்லாவிட்டால் பிரிந்து விடுவதுமாக உள்ளனர். இடையில் எதற்கு திருமணம் என்ற பந்தம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பியர்கள் அல்லாத குடிமக்கள், திருமணம் செய்து கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனாலும் கூட திருமணங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் குடியேறுவோர், குடிமக்கள் அந்தஸ்தைப் பெறுவதற்காக இங்கிலாந்துக்காரர்களை போலியாக திருமணம் செய்வது அதிக அளவில் நடந்து வந்தது. 2004ம் ஆண்டு மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரம் திருமணங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருமணம் செய்து கொள்வோருக்கு வழங்கப்பட்டு வந்த வரி உள்ளிட்ட சலுகைகள் திரும்ப பெறப்பட்டதும் கூட திருமணங்களின் எண்ணிக்கை குறைய முக்கியக் காரணமாகும்.

இன்னொரு முக்கிய அம்சமாக, குழந்தைகளுடன் வாழும் தனி நபர்களுக்கு அங்கு வரிச் சலுகை கிடைக்கிறது. மாறாக குழந்தைகளுடன வாழும் தம்பதிகளுக்கு சலுகைகள் இல்லை. இதனாலும் கூட, கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் கொள்கையை பலர் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 10 லட்சம் ஜோடிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும், கமிட்மென்ட்களும் இல்லாமல் தனித்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதாம்.

இந்த ஆய்வை நடத்தியவரான மோர்கன் கூறுகையில், நிலையான குடும்பங்கள்தான் மிகச் சிறந்தது. அப்போதுதான் தங்களுடைய குழந்தைகளை சிறந்தவர்களாக, சமூக விரோத எண்ணத்துடனும், குற்ற எண்ணத்துடனும் இல்லாமல் வளர்க்க முடியும். குடும்பச் சிதைவுதான் குற்றங்களுக்கான முதல் படிக்கட்டு என்கிறார்.

கல்யாணம், கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப முறை என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் பொருந்தக் கூடியது என்பதை இங்கிலாந்துக்காரர்கள் உணர்ந்தால் சரி.

ஈழம்-உறக்கத்தை அரசு கலைக்க வேண்டும்-ராமதாஸ்

Ramadoss
சென்னை: இந்த நேரத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். உறக்கத்தைக் கலைக்க வேண்டும். இலங்கை பிரச்னையை தீர்க்க இதுதான் சரியான தருணம். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஈழத் தமிழர்கள் நலன் காக்கக் கோரியும், இலங்கைக்கு இந்திய அரசு ராணுவ உதவிகளை செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாள் தொல். திருமாவளவன், பல்வேறு தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தைக் கண்டித்து தலைவர்கள் கோஷமிட்டனர். மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் தாக்கப்படுவதிலிருந்து தப்பிக்க தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதில் ராமதாஸ் பேசுகையில், சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவிகள் செய்வதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் என ஹைதராபாத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். உறக்கத்தைக் கலைக்க வேண்டும். இலங்கை பிரச்னையை தீர்க்க இதுதான் சரியான தருணம். கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

10 ஆண்டுக்கு முன், 1998 ஜூன் மாதத்தில் எனது தலைமையில் சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட எம்.பிக்கள் வாஜ்பாயை சந்தித்து மனுக் கொடுத்தோம். அந்த மனுவில், இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். அந்நாடு தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை இந்திய அரசு மாற்ற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனை பாதுகாக்க முன்வர வேண்டும் என, வலியுறுத்தினோம்.

அந்த மனுவில் முதலில் கையெழுத்திட்டவர் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

உங்கள் காலத்திலேயே இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளேன். இது நல்ல தருணம். கருணாநிதி நழுவ விடக் கூடாது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் போல தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற பாமக முனைப்போடு செயல்படும் என்றார்.

உலகத்தில் 2000‍-2039 வரைக்கும் நடக்க இருப்பது என்ன(உலகத்தின் அரிய ரகசியம்)

உஷார்!!!2000 to 2039 :இந்த 40 வ‌ருடங்களில் உலகத்தில் பெரும் துன்பங்களும் கஷ்டங்களும் வரவிருக்கின்றன அந்த இரகசியம் பற்றிய ஒரு பார்வை!!!!!!!

*In 2009 ‍‍ போரொன்றிற்காக அரபு/முஷ்லீம் நாடுகளும் வட ஆபிரிக்க நாடுகளும் ஈரான் ,ஈராக் தலைமயில் ஓரணியில் திரளும் இந்தப்படை அமேரிக்காவிற்கு ஆதர‌வான மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா,சிரியா,போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரும்‌.

*2009/2010 இல் பெரும் மாற்றத்தின் ஆபத்தின் தொடக்கமாகும்!!!!

*2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும்

*2010/2011 இல் நிண்ட இரத்தம் சிந்தும் 3ம் உலகப் போர் தொடங்கும் அப்போது
அரபுப்படைகளால் அமேரிக்காவின் நியுயோக்கில் நியூக்கிளியர் குண்டு வெடிக்க‌
வய்க்கப்படும்

*அடுத்து அரபுப் படைகள் ஐரோப்பாவை தாக்கும் அவர்கள் குறிப்பாக பிரான்ஷ் மற்றும் இதாலியை கடுமையாகத் தாக்குவார்கள் சுவிஷ் தவிர்ந்த ஏனைய எல்லா
ஐரோப்பிய நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும்

*அரபுப் படைகளை கட்டுப்படுத்த முடியாது அவர்கள் ஐரோப்பாவை பகுதி பகுதியாகப்பிரிப்பார்கள்..கிழக்கு ஐரோப்பா,வட ஆபிரிக்கா,ஷ்கேண்டினேவிய‌
நாடுகளில் ஆங்காங்கே சண்டைகள் ந்டைபெறும்.......

*ஐரோப்பா அரபுப் படைகளின் கட்டுப்பாடில் இருக்கும்.

*யூலை 2013 இல் வத்திக்கான் ந‌கரம் நுயுககிளியர் ஏவுகணையால் அழிக்கப்படும்

*2017/2019 :இல் 3ம் உலகப்போர் தணியும் உலகின் பலபாகங்களில் உள்நாட்டுப்போர் தொடர்ந்த வண்ணமே இருக்கும்......

*2020/2030:இல் வெற்றிபெற்ற அரபுப்படைகள் இலண்டன் உட்பட அனைத்து
நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வய்து ஆட்சிபுரியும்....

* 2033/2034 to 2037 -- அரபுப்ப்டைகளிடம் அடிமைப் ப்ட்டிருக்கும் அமேரிக்கா,ஐரோப்பாவை மீட்க‌ The Great Monarch தலைமைவில் 4ம் உலக் போர் தொடங்கும்.......
continue in next week:

இந்திய உதவி கேட்டுத் தூது சிங்களத் தளபதி வருகை மர்மம்

சிங்கள இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் டில்லி வந்தபோது அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது.

உதகையில் உள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 6 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அப்பாவி தமிழர்கள் பலர் நாள்தோறும் சிங்கள இராணுவத் தினராலும் இராணுவக் கைக்கூலிகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

நாள்தோறும் தமிழர்கள் வாழும் இடங்களை நோக்கி விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுகின்றன.

உலக நாடுகளின் கண்டனங்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சிங்கள இராணுவம் தமிழர்களை வேட்டையாடி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் கொலை ஆயுதங்கள் வாங்கி குவிப்பதோடு இந்தியாவிடமும் ஆயுதங்களை பெற்று தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகிறது.

இந்த கொலைகார இராணுவத்தின் தலைமைத் தளபதிக்கு சிறப்பான வரவேற்பை இந்திய அரசு வழங்கியது கண்டு தமிழர்களின் நெஞ்சமெல்லாம் புண்பட்டு உள்ளது.


நோக்கம் என்ன?

பொன்சேகாவின் திடீர் இந்திய பயணத்தின் நோக்கம் என்னை பற்றி திடுக்கிடும் செய்திகள் கிடைத் துள்ளன.

விடுதலைப் புலிகள் கைவசம் உள்ள வன்னிப்பகுதி மீது முழு மூச்சுடன் பெருந்தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்ற சிங்கள இராணுவம் திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மன்னார் பகுதியில் ஊடுருவ முயன்ற சிங்கள இராணுவம் புலிகளின் கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு பெரும் இழப்புகளுடன் பின் வாங்கி உள்ளது. இந்தச் சூழ்நிலையில் வன்னிப்பகுதி தாக்குதலில் நிச்சயமாக பின்னடைவு ஏற்படுமென பொன்சேகா அஞ்சுகிறார். அப்படி பின்னடைவு ஏற்பட்டால் புலிகள் தொடர்ந்து முன்னேறி யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றக் கூடும். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் இந்திய இராணுவத்தின் உதவி தங்களுக்குத் தேவைப்படும் என அவர் கருதுகிறார். அந்த உதவியைப் பெறவே அவர் தில்லி வந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பாதுகாப்புத் துறை ஆலேசாகர் .எம்.கே. நாரயாணன் மற்றும் இந்திய இராணுவத் தலைமைத் தளபதி உள்ளிட்ட பலரை அவர் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

இந்தியாவின் தரப்பில் கிடைத்த பதிலால் திருப்தியுடன் அவர் திரும்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

தில்லியின் தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து போராட வேண்டிய கட்டம் உருவாகி விட்டது. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணப் பொழுதும் ஈழத் தமிழர்களுக்குப் பேராபத்தாக முடியும் என்பதில் அய்யமில்லை.
thank you:then seithi

மலர்: 10இதழ்: 3 தி. ஆ. 2039 பங்குனி 1 (16-03-2008)

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று மாத சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது

வங்கியை கொள்ளையடிப்பது எப்படி? பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம்

வங்கியை கொள்ளையடிப்பது எப்படி? பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாடம்

சீனாவில் உள்ள குவாங்டோங் பல்கலைக்கழகத்தில் செக்ரெட்டரியல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கொள்ளையடிப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான அசைன்மெண்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதில் 6 மாணவர்கள் சேர்ந்து 7 நிமிடத்துக்குள் வங்கியை கொள்ளையடிப்பது என்பதை செய்து காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன்படி மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தனர். அவற்றில் சிறந்த திட்டத்தை நாங்கள் தேர்ந்து எடுத்தோம் என்கிறார் ஒரு மாணவர். இன்னொரு மாணவர் கூறுகையில், எந்த மாணவரும் இந்த திட்டத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. இதை திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்குமான பயிற்சியாக மட்டுமே நாங்கள் எடுத்துக்கொண்டோம் என்று தெரிவித்தார்.

இதுபற்றி பேராசிரியர் ஹே கூறுகையில், இந்த அசைன்மெண்டை எடுத்து செய்வதால், மாணவர்கள் வங்கியை கொள்ளையடிக்க துணிவார்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் மனமுதிர்ச்சி பெற்றவர்கள். எது சரி, எது தவறு என்பதை அறிந்தவர்கள் என்று கூறினார்.

16 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த எண்டவர் விண்கலம், இன்று அதிகாலை பத்திரமாகத் தரையிறங்கியது.

16 நாட்கள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த எண்டவர் விண்கலம், இன்று அதிகாலை பத்திரமாகத் தரையிறங்கியது.

விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகள் அவ்வப்போது சென்று தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். விஞ்ஞானிகளையும், அவர்களுக்குத் தேவையான ஆய்வுப் பொருட்களையும் பூமியில் இருந்து கொண்டு செல்லும் பணியில் விண்கலங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்டவர் என்ற விண்கலம், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வகம் ஒன்றையும், கனடா நாட்டில் தயாரான ரோபோ ஒன்றையும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு எடுத்துச் சென்றது. இவ்விரண்டையும் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் இறக்கிய எண்டவர் விண்கலம், அங்கிருந்து கிளம்பி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இன்று அதிகாலை பத்திரமாக தரையிறங்கியது.

ஆறு வயது பெண் குழந்தையை வங்கியில் கொள்ளையடிக்க வைத்த தாய்!!!

தனது ஆறு வயது பெண் குழந்தையை வங்கியில் கொள்ளையடிக்க வைத்த தாய் கைது செய்யப் பட்டுள்ளார். தென்கொரியாவின் ஜெஜு தென் தீவில் உள்ள ஒரு வங்கிக்கு தனது பெண் குழந்தையுடன் சென்றார் அந்த தாய். அங்கிருந்த வி.ஐ.பி., அறையில் யாரும் இல்லை. உள்ளே சென்று, அங்கு இருக்கும் பணத்தை எடுத்து வருமாறு தனது குழந்தையிடம் கூறினார். வி.ஐ.பி., அறைக்குள் சென்ற சிறுமி, அங்கிருந்த மேஜை டிராயரில் இருந்த ரூ. ஐந்து லட்சம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை திருடிக் கொண்டு வந்தார். குழந்தையுடன் வெளியேறிவிட்டார் அந்த பெண். குளோஸ்டு சர்க்யூட் கேமராவில், இவை அனைத்தும் பதிவானது. பணம் கொள்ளை போன தினத்தன்றே, அந்த பெண்ணை போலீசார் கைது செய்துவிட்டனர். திருடிச்சென்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Wednesday 26 March 2008

திபெத். பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் ஒலிம்பிக்யை புறக்கணிப்போம்

திபெத் பிரச்சினைக்கு தீர்வு காண தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுத்தால், சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் எனறு பிரான்சு அதிபர் சர்கோசி எச்சரித்தார்.

100 பேருக்கு மேல் பலி

சீனாவில் பலாத்காரமாக இணைக்கப்பட்ட திபெத் பகுதிக்கு விடுதலை கோரி திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில் 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக திபெத்திய தலைவர் தலாய்லாமா குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்கு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்தன. திபெத்துக்குள் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் நுழைவதற்கு சீனா தடை விதித்துள்ளது.

திபெத் தலைநகர் லாசாவில் போராட்டத்தை ராணுவத்தின் துணை கொண்டு ஒடுக்கிய போதிலும் இந்த போராட்டம் சீனாவின் அண்டை மாநிலங்களில் சீனா எதிர்ப்பு போராட்டம் பரவியது.

புறக்கணிப்போம்

திபெத் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு திபெத்திய தலைவர் தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தையை சீனா தொடங்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால் வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி நடக்கும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை நாங்கள் புறக்கணிப்போம் என்று பிரஞ்சு அதிபர் சர்கோசி அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பொறுப்பு பிரான்சு வசம் விரைவில் வர இருக்கிறது. அதனால் அவரது புறக்கணிப்பு அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்கா எதிர்ப்பு

இதற்கிடையில் ஒலிம்பிக்போட்டி தொடக்கவிழாவை புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்று கூறி அமெரிக்கா மறுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், ஒலிம்பிக் போட்டி விளையாட்டு தொடர்பானது. இதில் அரசியலை கலக்கக்கூடாது.எனவே, ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதை நான் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

சீனா உலக நாடுகளுக்கு விடுத்து உள்ள வேண்டுகோளில், திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு எந்த விதமான ஆதரவும் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு உள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம்


திபெத்தில் ஏற்பட்ட கலவரம் தலாய்லாமா கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிச்செயல் ஆகும் என்று சீனா கூறிஉள்ளது. இது தொடர்பாக சீன அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், தலாய்லாமா பிரிவினைவாத கோரிக்கையை கைவிடும்வரை அவருடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,சீனாவின் நிலைப்பாட்டுக்கு 110 நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
video news:

பாகிஸ்தான் பிரதமர் கிலானி நடிகை ஐஸ்வர்யாராயின் ரசிகர்

புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கும் கிலானி, இந்திய நடிகை ஐஸ்வர்யாராயின் ரசிகர் ஆவார். அதுபோல பாடகி லதா மங்கேஷ்கர் பாடல்கள் இவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம்.

நான் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தபோது, அதிகாரத்தை தவறாகப்பயன்படுத்தி தகுதி இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்தேன் என்று குற்றஞ்சாட்டி என்னை கைது செய்து 2001-ம் ஆண்டு முஷரப் சிறையில் அடைத்தார். சிறையில் இருந்தபோது நான் ஐஸ்வர்யாராயின் அனைத்து சினிமாக்களையும் என் லேப்டாப் கம்ப்ïட்டரில் பார்த்து ரசித்தேன் என்று சொல்கிறார்.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்ப

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டார்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, பி.சி.சி.ஐ. நிதியில் இருந்து சுமார் 3 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக, அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, அவர் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

டால்மியா மீதான புகார் தொடர்பாக, விசாரணை நடத்திய மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவர் குற்றவாளி என்பதை உறுதிசெய்தனர். இதனையடுத்து, டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய டால்மியாவின் வழக்கறிஞர் திரு. சதிஷ், இந்தக் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறி மத்திய அமைச்சரும், கிரிக்கெட் வாரிய தலைவருமான திரு. சரத்பவாரை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.


பி.சி.சி.ஐ. மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கைது செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3 கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார் : பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் டால்மியா கைது

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அதன் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டார்.

1996-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, பி.சி.சி.ஐ. நிதியில் இருந்து சுமார் 3 கோடி ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியதாக, அப்போதைய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, அவர் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

டால்மியா மீதான புகார் தொடர்பாக, விசாரணை நடத்திய மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அவர் குற்றவாளி என்பதை உறுதிசெய்தனர். இதனையடுத்து, டால்மியா மும்பையில் இன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய டால்மியாவின் வழக்கறிஞர் திரு. சதிஷ், இந்தக் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என்று கூறி மத்திய அமைச்சரும், கிரிக்கெட் வாரிய தலைவருமான திரு. சரத்பவாரை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.


பி.சி.சி.ஐ. மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கைது செய்யப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 நாயகிகளுடன் ரஜினி ஆட்டம்!

Trisha
குசேலன் படத்தில் இடம் பெறும் ரஜினியின் கனவுப் பாடலில், இப்போது ஐந்து நாயகிகள் இணைந்து ரஜினியுடன் ஆடுகின்றனராம்.

குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியின் காட்சிகளை படு பிரமாண்டமாக எடுக்கும் இயக்குநர் பி.வாசு, ரஜினிக்கு ஒரு கனவுப் பாடலையும் வைத்துள்ளார்.

இப்பாடலில், ரஜினிகாந்த் நயனதாரா, மம்தா மோகன்தாஸ், ஸ்னேகா ஆகியோருடன் ஆடிப் பாடுவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது இவர்களுடன் திரிஷா, இலியானாவையும் சேர்த்துள்ளார் வாசு. இதனால் ஐந்து நிமிடமே வரும் இப்பாடலில், ஐந்து நாயகிகளுடன் ஆடிப் பாடுகிறார் ரஜினி.

ஹைதராபாத்தில் உள்ல ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கனவுப் பாடலில் ஆடிப் பாடுவதற்காக ஏற்கனவே நயனதாராவும், திரிஷாவும் ஹைதராபாத் போய் சேர்ந்து விட்டனர். அடுத்து ஸ்னேகா, மம்தா மோகன்தாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படம் பிடிக்கவுள்ளார் வாசு.

மேலும், இலியானாவையும் இழுக்க வாசு முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் இலியானாவை முயன்றார் வாசு. ஆனால் இலியானா மறுத்து விட்டார். இதையடுத்தே நயனதாராவை புக் செய்தனர். இப்போது ஒரு பாடல் காட்சிக்காக இலியானாவை அணுகியுள்ளார் வாசு.

தற்போது பாடல் காட்சி தவிர ரஜினி, ஜெகபதி பாபு, மீனா, நயனதாரா, வடிவேலு தொடர்பான காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறார் வாசு.

இந்தக் காட்சிகளில் ஆயிரக்கணக்கான ஜூனியர் நடிகர், நடிகையர் பங்கேற்றுள்ளனராம். இந்தக் காட்சிகளை முடித்து விட்டு கனவுப் பாடல் காட்சியை ஷூட் செய்யவுள்ளனராம்.

தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் பகுதி மனித நடமாட்டமே இல்லாத பாலைவனம் போன்ற இடமாம். இதனால் ரஜினி உள்ளிட்ட கலைஞர்களின் வசதிக்காக 7 கேரவன்களை வாடகைக்கு அமர்த்த திட்டமிட்டார் வாசு. ஆனால் ரஜினி அதை மறுத்து விட்டாராம்.

சின்னக் குடிசை போட்டுக் கொடுத்தால் போதும், அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறேன் என்று சிம்பிளாக கூறி விட்டாராம். இதனால் பகல் முழுவதும் டென்டு கொட்டாயில்தான் ரஜினி உள்ளிட்டோர் தங்கியுள்ளனராம். இரவில் மட்டும் ஹோட்டலுக்குப் போய் விடுகிறார்கள். அதுவும் கூட பிலிம் சிட்டி வளாகத்திலேயே உள்ள சாதாரண ஹோட்டல்தானாம்.

ரஜினியே இப்படி சிம்பிளாக இருப்பதால் மற்ற கலைஞர்களும் கூட ஆடம்பர வசதிகளை உதறி விட்டார்களாம்.

ஏப்ரல் முதல் வாரம் வரை ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெறுமாம். இந்தப் படப்பிடிப்பு தெலுங்கு குசேலனுக்காக நடக்கிறது. அடுத்து பொள்ளாச்சிக்கு இடம் பெயறுகிறார்கள். அங்கு தமிழ்ப் பதிப்புக்கான காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.

விண்டோஸை விழுங்கும் ட்ரோஜன் வைரஸ்- உஷார்

கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்கை நாசப்படுத்தும் புதிய வகை ட்ரோஜன் வைரஸ் இன்டர்நெட் மூலம் பரவி வருகிறது.

இன்டர்நெட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது 'அப்டேடட் விண்டோஸ் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யுங்கள்' என்ற எச்சரிக்கை மெசேஜ் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தால் உஷாராகி விடுங்கள். அது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தகவல் பைல்களை அழித்து, ஹார்டு டிஸ்கை முடக்கிவிடக்கூடிய 'ட்ரோஜன்' வைரஸாக இருக்கலாம்.

இதுபற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்துக்கு புதிய அப்கிரேடட் வர்ஷன்களைத் தருவதாகக் கூறி வைரஸ் ஏற்றிய பைல்களை சில போலி இணைய தளங்கள் இன்டர்நெட்டில் பரப்பிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு அறிமுகமான இமெயில் முகவரியைப் போன்றே அந்த ஸ்பாம் மெயில்களும் இருக்கும். இதை நம்பி ஸ்பாம் மெயில்களை திறந்தால் ஒரு வெப்பேஜூக்குள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

அதில், “urgent install" என்ற ஆப்ஷனை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும். தப்பித்தவறி அந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்தால் அவ்வளவுதான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் ட்ரோஜன் வைரஸ் பரவிவிடும். வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுவிட்டால் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள் அழிந்து சிஸ்டம் கிராஷ் ஆகிவிடும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. வைரஸை பரப்பும் ஸ்பாம் மெயில்களில் உள்ள லிங்க் ஆப்ஷனில் “install" என்ற வார்த்தைக்கு பதில் “intall" என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருக்கும். இதுதான் வைரஸை பரப்பும் ஸ்பாம் மெயிலுக்கான அடையாளம். உஷாராக இதை கவனித்துவிட்டால் தப்பித்துக் கொள்வீர்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆபரேடிங் சாப்ட்வேரை குறிவைத்தே இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. எனவே விண்டோஸை பயன்படுத்தும்போது சிக்கல் ஏற்பட்டால் அவற்றை சமாளிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் பின்பற்றவேண்டும்" என மத்திய தகவல்தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த சைபர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

Tuesday 25 March 2008

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படத்தில், அரசியல் தலைவர்கள்

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஆகியோர் தோன்றும் காட்சிகள் இணைக்கப்படுகின்றன.

`தசாவதாரம்'

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள `தசாவதாரம்' படத்தை, ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்துள்ளார். ரூ.50 கோடி செலவில் தயாராகியுள்ள இந்த படம், இந்திய திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படம், ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் திரைக்கு வரும் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக, `தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கலந்துகொள்கிறார். அவருடன் அமிதாப்பச்சன், மம்முட்டி, சிரஞ்சீவி போன்ற பிரபல நடிகர்களும் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

கருணாநிதி

`தசாவதாரம்' படத்தில், சில அரசியல் தலைவர்கள் தோன்றும் காட்சிகளை இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கமலஹாசனின் 10 வேடங்களில் ஒன்று, பிரபல விஞ்ஞானி. அவர் தனது புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அறிமுகம் செய்கிறார். இதற்காக அவருக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறுவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ் முன்னிலையில் இந்த விழா நடக்கிறது. அதில், முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொள்வது போன்ற காட்சி இணைக்கப்படுகிறது. இதற்காக கமலஹாசன், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஒரு கமலஹாசனுடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது போன்ற காட்சியை இணைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் மேடையில் பேசுவது போன்ற ஒரு காட்சியும் படத்தில் இடம்பெறுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய சினிமா

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது.

`பிரபாகரன்' சினிமா

சென்னை கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகே ஜெமினி கலர் லேப் உள்ளது. இந்த லேப்பில், `பிரபாகரன்' என்ற சிங்கள மொழிப்படம் கலர் பிரிண்ட் எடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது.

இந்த தகவலை கேள்விப்பட்டதும், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குனர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஜெமினி கலர் லேப் முன்பு குவிந்தனர்.

`பிரபாகரன்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சினிமாவில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி தவறாக சித்தரித்திருப்பதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சத்தம் கேட்டு லேப்பில் இருந்து வெளியே வந்த அந்த சினிமா படத்தின் இயக்குனர் பெரீஷ் என்பவரையும் அடித்து உதைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமாதானம்

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து `பிரபாகரன்` சினிமா படத்தை, 27-ந் தேதி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு போட்டுக் காண்பிப்பது எனவும், அவர்கள் படம் குறித்து ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில் படத்தை பிரிண்ட் எடுக்க அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

காதலிப்பது எப்படி? சிங்கப்பூரில் மாணவர்களுக்கு பாடம்!

சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு காதலிப்பது எப்படி, பெண்களைக் கவருவது எப்படி என்பது குறித்து கல்லூரி பாடத் திட்டத்தில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து கல்லூரி அளவில் காதலை ஒரு பாடமாக வைக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டது. அதன்படி தற்போது காதல் பாடம் கல்லூரிகளில் அறிமுகமாகியுள்ளது.

இளநிலைப் பட்டப் படிப்பின் கடைசி செமஸ்டரில் காதல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. காதல் பாடத்தில் தேறினால் இரண்டு கிரெடிட்டுகள் கூடுதலாக வழங்கப்படும்.

காதல் பாடத்தின் கீழ், கிளுகிளுப்பான படங்களைப் பார்ப்பது, ஆண், பெண் உறவு, காதலை மையமாகக் கொண்ட பாடல்களை ஆய்வு செய்வது, பெண்கள் மற்றும் ஆண்கள் கை குலுக்கும் விதம், ஆணை பெண்ணும், பெண்ணை ஆணும் எப்படி கவருவது உள்ளிட்டவை 'முக்கிய' அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து இசபெல் சீத் என்ற மாணவி கூறுகையில், ஒரு வாலிபன் எனது கண்களை தொடர்ந்து ஐந்து விநாடிகளுக்கு மேல் பார்த்தால், நான் அவனைக் கவர்ந்திருக்கிறேன் என்று அர்த்தம் என எனது ஆசிரியர் கூறியுள்ளார். என்னை அவன் விரும்புகிறான் என்று இதற்கு அர்த்தம் என்றும் கூறியிருக்கிறார் என்கிறார் (ரொம்ப வெள்ளந்தியா இருக்கிறாரே!)

காதல், செக்ஸ் தவிர குடும்ப வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பது குறித்தும் இந்தப் பாடத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குப் போதிக்கப்படுகிறதாம்.

கமல் பிரகாஷ் என்கிற மாணவர் கூறுகையில், இந்தப் பாடத் திட்டம், எனது பெற்றோர்களுடனான எனது நட்புறவை மேம்படுத்தியுள்ளது. இருந்தாலும் நான் இன்னும் சிங்கிள் ஆகத்தான் உள்ளேன். எந்தப் பெண்ணையும் நான் கவரவில்லை போல என்கிறார் கவலையுடன்.

இந்த பாடத் திட்டத்தின் கீழ் போதனை செய்வதற்கான ஆசிரியர்களை சமூக வளர்ச்சித் துறை கல்லூரிகளுக்கு அளிக்கும். இவர்கள் அனைவருமே கல்யாணமானவர்கள். குறிப்பாக காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல், கிளுகிளுப்பு, பெண்களைக் கவருவது குறித்துப் போதிக்க இப்போதைய தமிழ் சினிமா பாடல்களை ஒரு வாட்டி போட்டுக் காட்டினாலே போதுமே, எதற்காக பாடம், ஆசிரியர், மார்க் .....??

Monday 24 March 2008

AIDS : Made in America - பேரழிவு ஆயுதம்

Dr. புகழேந்தி (இந்தியா)

(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )

இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட்ட செய்திகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
எய்ட்ஸ் பீதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஊசி தயாரிக்கும் குழுமங்களும், இரத்தம் செலுத்தும் மையங்களும், ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்களும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிட்டன.

எய்ட்ஸ் என்பது இயற்கை வியாதியா?

எய்ட்ஸால் இறந்த பலரையும் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர்களின் அறிக்கை நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. எயிட்ஸ் என்பது இயற்கையான வியாதியுமல்ல, ஓரினச் சேர்க்கையாளர்களை (Homo Sexuals) ஒழிக்க மட்டும் வந்த வியாதியுமல்ல. கருப்பின மக்களை மட்டும் அழிக்கவந்த வியாதியுமல்ல. எய்ட்ஸ் என்பது மனிதர்களால் சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரத்திலிருந்து(1) எய்ட்ஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது இன்று உறுதியாகின்றது.(2)

இத்தகைய ஆட்கொல்லிக் கிருமி உருவாக்கங்களின் தேவை என்ன? இது எத்தகைய அழிவுகளை உருவாக்க வல்லது என்பதனையும், இதன் பின்புலம் என்ன என்பதனையும் அறிந்தோமானால், அதிர்ச்சியளிக்கக்கூடிய பல உண்மைகள் புரியவரும்.

எய்ட்ஸின் பின்னணி

அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவவும், மூன்றாம் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் எய்ட்ஸ் போன்ற கிருமியை உருவாக்கத் திட்டமிட்டது. இதற்கான நிதியை அமெரிக்க காங்கிரஸ் இடமிருந்து (60 மில்லியன்டாலர்கள்) பெற்று அமெரிக்க இராணுவத் தலைமைக்கு (பென்டகன்) வழங்கியுள்ளது. இதற்கு பின்புலமாக செயற்பட்டவர் ஹென்றி கிஸ்சிங்கர் (அமெரிக்காவின் முன்னாள் Secretary of State) என்பதும், இந்த இரகசிய உயிரியல் கிருமியை உருவாக்கும் திட்டத்திற்கு MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals) எனப் பெயரிடப்பட்டது என்பதும், சீ.ஐ.ஏ.யின் துணையுடன் இத்திட்டத்தின் முழுக் கட்டுப்பாடும் கிஸ்சிங்கர் மற்றும் அவருடன் இருந்த மிகச் சில MK NAOMI விஞ்ஞானிகள் கைகளிலேயே இருந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த இராணுவ உயிரியல் கொல்லி ஆராய்ச்சித் திட்டத்தின் விளைவாக மனிதனில் நோய் எதிர்க்கும் திறனை சீர்குலைக்க உருவாக்கப்பட்ட ஆற்றல் மிக்க கிருமியால் ஏற்படும் (இறப்பும்) முடிவுகளையும், அதற்கான விரிவுபடுத் தப்பட்ட திட்டங்களையும் அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வழக்கம்போல இச்செய்திகள் வெளிவராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுமுள்ளன.

செயல்திட்ட வடிவங்கள்

1964 இல் உலக நாடுகளிலிருந்து பலதரப்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை சேகரிப்பதும், புற்றுநோய் உருவாக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை பெருமளவில் சோதனைச் சாலைகளில் வளர்ப்பதற்குமான சிறப்பு வைரஸ் புற்றுநோய்த் திட்டமும் (SVCP - Special Virus Cancer Program 1962-77) தேசிய புற்றுநோய் நிறுவனமும் (NCI - National Cancer Institute) அரசின் நிதி உதவியோடு ஒன்றாக இணைக்கப்பட்டு அனைத்து புற்று நோய்களையும் உள்ளடக்கக்கூடிய ஆய்வுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.
இவ்வாய்வுத் திட்டத்தின் கீழ், சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனித உடம்பில் பொருத்தி, சோதனை செய்துள்ளனர். 1964 இல் சிம்பன்சி குரங்கின் சிறுநீரகங்களை ஆறு மனிதர்களுக்குப் பொருத்தியதில் ஆறு பேரும் இறந்துள்ளனர். பின்னர் மனிதர்களுக்கிடையே உறுப்பு மாற்றம் செய்ததில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.

SVCP திட்டத்தின் மூலமே விலங்குகளைப் பாதிக்கும் பல வைரஸ் கிருமிகளை மனிதர்களிடையே பரப்பும் சோதனைகள் நடந்தேறியுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக புற்றுநோயை உண்டாக்கவும், மனித நோய் எதிர்ப்புத் திறனை சீர்குலைக்கக்கூடிய பல விலங்கு வைரஸ் கிருமிகள் மனித செல்களுக்கும்(Cells), திசுக்களுக்கும் மாற்றம் செய்யும் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இக்குழுவில் Robert GalloTk (எய்ட்ஸ் கிருமியின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) இடம்பெற்றிருந்தது முக்கிய அம்சமாகும். இத்திட்டத்தில் ஜப்பான், ஸ்வீடன், இத்தாலி, நெதர்லாந்து, இஸ்ரேல், உகண்டா, ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

பின்னர் இத்திட்டத்தில் அமெரிக்க இராணுவ உயிரியல் போர்முறை (Biological Warfare) ஆய்வாளர்களும் இணைக்கப்பட்டனர். அக்டோபர் 18, 1971 இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் உத்தரவின்பேரில் இராணுவ உயிரியல் போர்முறைச் சோதனைச் சாலைகளை SVCP இன் கீழ் கொண்டுவரும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில் ஆய்வகத் தேவைகளுக்கான புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை தொடர்ந்து கிடைக்கும் வகையில் செய்தலே அதன் முக்கிய பணி என்றும் மனிதர்களுக்கு நெருக்கமான விலங்குகளைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, (எய்ட்ஸை உண்டாக்கும் HIV அத்தகைய இனத்தைச் சேர்ந்தது) மனிதர்களை பாதிக்கும் வைரஸ் கிருமிகளை பெருமளவு வளர்த்தெடுப்பது போன்றவை பிற பணிகளாகவும் இருக்கும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த ஆய்வகங்களில் தான் சுண்டெலி, பூனை போன்ற வற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வைரஸ் கிருமிகளை குரங்குகளுக்குச் செலுத்தி அதன்மூலம் குரங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் சோதனையில் வெற்றி அடைந்தனர். இத்தகைய சோதனைகளில், இனம் விட்டு இனம் தாவும் (Species jumping) கிருமிகள் உருவாக்கப் படுவது பொதுவான விசயமாக இருந்து வந்தது.
1970 இல் எய்ட்ஸ் ஏற்படுத்தும் HIV கூடவே ஒரு புதுவகை Herpes வைரஸ் ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த Herpes வைரஸ் தற்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் Kaposis Sacroma (Gay Cancer of AIDS) என்ற நோய்க்குக் காரணம் என நம்பப்படுகின்றது. உலகில் எய்ட்ஸ் தாக்கம் வருமுன் ஆரோக்கியமான இளைஞர்களுக்கு Kaposis Sacroma பாதிப்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பத்து ஆண்டுகள் கழித்து தெரியவந்த (1994இல்) Kaposis Sacroma வைரஸ்களுக் கும் மனிதர்களை ஒத்த தன்மையுள்ள விலங்கினங்களுக்கு (குரங்குகளுக்கு) வியாதியை ஏற்படுத்தும் Herpes வைரஸ்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும், அத்தகைய வைரஸினைத் தான் பத்தாண்டுகளுக்கு முன்னர் விலங்குகளிடமிருந்து மனித உடலில் வெற்றிகரமாக செலுத்தும் ஆய்வுகள் மும்முரமாக நடைபெற்றன என்பதும் தெளிவாக உள்ளது.

மேலும், கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ள துடன், HIV வைரஸ் புற்றுநோயை உண்டாக்கவல்ல கிருமியே எனவும், எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாகவரும் ஒருவித புற்றுநோயே என்பதை 1984 இல் Robert Gallo (எயிட்ஸ் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர்) தெளிவுபடுத்தி உள்ளார்.

போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க்ஸ் செய்த பல ஆய்வுகளில் அவருக்குத் தெரியாமலேயே Hela செல்கள் கலந்திருந்தது அவருக்குப் பின்னர் தெரியவந்துள்ளது. அதே போல் புற்றுநோய் தடுப்பூசி ஆய்வுகளில் Hela செல்கள் அதிகம் கலந்திருப்பது பிறகு தெரியவந்துள்ளது. (4)
1951 இல் முதன் முதலில் சோதனைச்சாலைகளில் மனித செல்களை வளர்த்தெடுத்தனர். இதற்கு பால்டிமோர்
நகரைச் சேர்ந்த Hennrieta Lacks என்னும் இளம் கறுப்பின பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட திசுவே Hela செல் என அழைக்கப்படுகின்றது.
இதே போல் இரண்டாம் உலகப் போரின் போது மனித இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட Yellow Fever Vaccine இல் மஞ்சள் காமாலை வைரஸ் (Hepatitis Virus) கலந்திருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.

1970 - 80 களில் குடர காய்ச்சலுக்கு எதிரான தடுப் பூசிகளில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் தயாரான Mycoplasma, வைரஸ் கிருமிகள் கலக்கப்பட்டிருந்ததுடன் இதை டெக்சாஸ் மாநில ஹன்ட்ஸ்விலி சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதை இராணுவமும், மருத்துவ மையங்களும் இணைந்து நடத்தியது. இந்த மனித விரோத பரிசோதனைக் குழுவில் DNA வடிவத்தைக் கண்டு பிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஜேம்ஸ் வாட்சனும் ஒருவர் என்பது வெட்கக்கெடான செய்தி. (இவர் தற்போது Human Genome Project இன் முக்கிய அலுவலர்)
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இரகசியமாக செலுத்தப் பட்ட Mycoplasma Penetrans எனும் கிருமியைப் பற்றிய தகவல்களும் மறைத்தே வைக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் டேவிட் என்னுமிடத்தில் ஒரு வகை குரங்குகளிடம் ஏற்பட்ட எயிட்ஸ் கொள்ளை நோய் (Simian AIDS) காரணமாக பெரும்பாலான குரங்குகள் இறந்துள்ளன. இதுவே முதலில் பதிவுசெய்யப்பட்டது. இதுபோன்று நான்கு இடங்களில் இது நிகழ்ந்துள்ளது. இந்த வகை குரங்குகள் இறந்துபோக HIVNa காரணம் எனப் பின்னர் தெரியவந்தது. இச்சம்பவத்தை மறைக்க பல குரங்குகள் அட்லாண்டாவி லுள்ள எர்கிஸ் பகுதிக்கு கடத்திவரப்பட்டன. இவ்வாறு கடத்தப்பட்ட குரங்குகள் அனைத்தும் 1980 வாக்கில் Simian AIDS நோயால் தாக்கப்பட்டு இறந்துள்ளன.

1974ல் கால்நடை மருத்துவர்களால் சிம்பன்சி குரங்குக் குட்டிகளிடம் எயிட்ஸ் போன்ற நோய் உருவாக்கப்பட்டது. இளம் சிம்பன்சி குரங்குக் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து, Bovine C Type Virus என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளான மாடுகளிடமிருந்து கிடைக்கும் வைரஸ் கலந்த பாலை மட்டும் கொடுத்தால் அக்குரங்குக் குட்டிகள் ஒரு வருடத்துக்குள் நியுமோனியா காய்ச்சல் (The Gay Pneumonia of AIDS) கண்டு இறந்துள்ளன.

1979இல் பெண்டகன் மையத்தின் உயிரியல் விஞ்ஞானி Dr. Mac Arthur இன் உத்தரவுக்கிணங்க சோதனைச் சாலைகளில் உருவாக்கப்பட்ட HIV அமெரிக்காவில் முற்றிலும் வெறுக்கப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களிடத்து அவர்களுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் விளைவாகவே AIDS கிருமி அவர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பரப்பப்பட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் AIDS ஆல் பாதிக்கப்பட்டவர்கள் நியுயோர்க் மன்ஹட்டன் நகரைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களே. மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்திற்கு ஒத்துக்கொண்ட 20 சதவீதமான ஓரினச் சேர்க்கையாளர்கள் இரத்தத்தில் 1980 - 81 வாக்கில் செய்யப்பட்ட ஆய்வில் HIV Positive இருப்பது தெரியவந்தது. இது 1983 இல் 30 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1981இல் தான் HIV எயிட்ஸ் க்கு காரணம் என வெளியிடப்பட்டது.

நியுயார்க் நகர மன்ஹட்டன் (Manhatton) தான் எய்ட்சின் பிறப்பிடம். ஆபிரி;க்காவில் 1982ஆம் ஆண்டின் பின்னரே உறுதிசெய்யப்பட்ட AIDS நோயாளிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எய்ட்ஸ் வல்லுநர்கள் சிம்பன்சி குரங்குக ளிடம் இருந்துதான் மனிதனுக்கு எயிட்ஸ் கிருமி தொற்றி உள்ளது எனும் கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்கின்றனர்.
1970களில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசி சிம்பன்சி குரங்குகளின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், குரங்குகளிடமிருந்து எய்ட்ஸ் தோன்றி வளர்ந்திருக்கிறது என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.
ஆபிரிக்காவில், உலக சுகாதார நிறுவனத்தின் திட்டமான பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், பல மில்லியன் மக்களுக்கு, எய்ட்ஸ் கிருமி கலந்த பெரியம்மை தடுப்பூசி கொடுத்ததன் காரணமாக எயிட்ஸ் பரவியது என்பதை மே 11 1987 டைம்ஸ் பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது(6).

சோதனை விலங்குகளாக சொந்த நாட்டு மக்கள்

1965இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் 1997 வரை, விலங்குகளிடமிருந்து மனித செல்களில் பரவக்கூடிய வைரஸ் கிருமிகளை ஆய்வுசெய்யும் நியுயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகளுக்கு விலங்கின் உறுப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது.
நியுயார்க் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் தான் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள் என்பது கவனிக்கத்ததக்கது.
1994இல் மக்களின் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகளை அமெரிக்க மக்கள் மீது அரசு நடத்தியுள்ளதற்கு எதிராக பல்வேறு ஜனநாயக அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு இணங்கிய அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், இவற்றை விசாரிக்க அறிவுரைக் குழுவினை ஏற்படுத்தினார். தனது அறிக்கையில் (3 ஒக்டோபர் 1995) 1960 வரை மருத்துவர்கள் நோயாளிகளின் ஒப்புதல் பெறாமலே அவர்கள்மீது சேதனை செய்துள்ளதை அக்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் 20 வருடங்களுக்கு மேலாக The U.S.Code annotated title 50, Chapter 32, Section 1520, dated July 30, 1977 என்கின்ற இச்சட்டத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைச்சகம் தனது சொந்த மக்களையே சோதனை விலங்குகளாக நடத்த ஒப்புதல் அளித்து வந்துள்ளது.

எய்ட்ஸ் யாரையும் தாக்கலாம் என இருந்தாலும், ஆபிரிக்காவில் ஆண் - பெண் புணர்ச்சிக்குப் பின்பே எய்ட்ஸ் ஏற்பட்டது என்பதும், அமெரிக்காவில் அது ஓரினச் சேர்க்கையாளர்களிடம் (ஆண்களிடம்) அதிகமாகக் காணப்பட்டது என்பதும் தெளிவான விசயங்கள்.

HIV கிருமி இனம், மொழி, பாலினத்தை மதிக்காது எனக் கொண்டால் ஏன் அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டும் எய்ட்ஸ் அதிகம் வரவேண்டும்?

எய்ட்ஸ் வல்லுநர்கள் அமெரிக்காவில் எய்ட்ஸின் பாதிப்பு ஆபிரிக்காவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பாதிக்குதம் எய்ட்ஸ் கிருமி வகை ஆபிரிக்காவில் இல்லவே இல்லை. பின் இது எப்படிச் சாத்தியம்?

1990களில் அணுவியல் உயிரியல் வல்லுநர்கள் எய்ட்ஸ் கிருமியில் எட்டு வகைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் D வகை தான் பெருங்குடலைக் (Rectum) தாக்கும் திறனைக் கொண்டது. இந்தவகை எய்ட்ஸ் கிருமி அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தாக்குகின்றது. மாறாக ஆபிரிக்க எயிட்ஸ் கிருமி பிறப்புறுப்பு செல்களை (Vaginal Cervical Cells) தாக்கும் திறன் இருப்பது தெரியவந்தது. டீ வகைக் கிருமிகளால் அச்செல்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை.

1997 ஆய்வுகளில் பத்தில்; ஒரு அமெரிக்கருக்கு (வெள்ளை இன) எய்ட்ஸ் எதிர்க்கும் மரபணுக்கள் இருப்பதா கவும், ஆபிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களில் ஒருவர் கூட எய்ட்ஸ் பாதுகாப்பு மரபணுக்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் தெளிவாகக் கூறுகையில் எயிட்ஸ் கிருமி என்பது சில இனக் குழுக்களையும் (கறுப்பர்களையும்) ஓரினச்சேர்க்கையாளர்களையும் திட்டமிட்டு ஒழிக்க உருவாக்கப்பட்ட Designer Virus என்பது தெளிவாகின்றது.

எய்ட்ஸ் கிருமி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Robert Gallo 1987இல் Play Boy சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் "எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் ஆண் -பெண் புணர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை என்று கூறலாம்" என்றும், "அமெரிக்க பொது மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி என்றும் பெரும் பிரச்சினையாக இராது" என்றும் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
"அமெரிக்க அதிகார மையங்களை விரிவுபடுத்த ஆற்றல் கொண்ட கிருமியை (Super Germ)உருவாக்குவதன் தேவை அரசுக்கு உள்ளது" A.H.Passerella - Director, Department of Defence, USA.

ஆக எயிட்ஸ் கிருமி அமெரிக்க ஆய்வகங்களில் உருவாகி பல ஆயிரம் மக்களை அழிக்கும் எண்ணத்துடன் (Weapon of mass destruction WMD) உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் இவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவான பின்பும், அமெரிக்கா மற்றவர்களிடம் உயிரியல் ஆயுதம் இருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்கும் இவர்களின் யோக்கியதையை நாம் என்னவென்பது?

Reference:
1. Dr. Alan Cantwell Jr. Queer Blood: The secret AIDS Genocide plot.
2. John Seale, M.D. "Origins of AIDS viruses HIV-1 & HIV-2: Fact or Fiction?" The British Journal of the Royal Society of Medicine
- 1988 (81: 617-619)
3. Dr Leonard G. Horowitz. "Emerging virusus: AIDS. Ebola", Accident or International (1996)
4. M.Gold, A conspiracy of cells: one woman's immortal legacy and the medical scandal it caused.
5. William Blum, Rough State.
6. "Small pox Vaccine Triggered AIDS Virus" The London Times Front page story 11.05.1987