Monday 31 March 2008

கல்கமுவ தேக்குமர காட்டில் எரியூட்டப்பட்ட சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அம்பான்பொல காவல்துறை பிரிவில் உள்ள கல்கமுவ தேக்கு மர காட்டில் இருந்து இன்று (31-03) எரியூட்டப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த தேக்கு மர காடு கல்கமுவ பிரதான வீதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் சுமார் 25 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவருடையது என காவல்துறையினர் தெரிவித்தனர். மஹாவ பிரதேச நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை நடத்தியிருந்தார். எரியூட்டப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லை. அம்பான்வெல காவல்ததுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்னனர்.

No comments: