Monday 31 March 2008

இலங்கை நாட்டவர்கள் நடுக்கடலில் கைது

இந்திய கடற்படை ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை நாட்டவர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
ரமேஸ்வரம் அருகே உள்ள உச்சிப்புலி கடல் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் இலங்கையைச் சேர்ந்த அன்ரன் (40) மற்றும் வாலண்டைன் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த படகையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திரிகோணமலை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், 3 குழந்தைகள் ஆகியோரை அரிச்சல் முனையில் சேர்த்துவிட்டு, தாயகம் திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை நாட்டவர்கள் பிடிபட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments: