Sunday 30 March 2008

லண்டனில் விமான விபத்து: 5 பேர் பலி

லண்டலினில் தனியார் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். பிரான்ஸ் விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட தனியார் விமானத்தில் இரண்டு பைலட்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பயணிகள் இருந்தனர். இந்த விமானம் லண்டன் பகுதியில் பறந்த போது, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர். இது தவிர விமானம்‌ விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.

No comments: