Wednesday 30 April 2008

கனடாவில் நடைபெற்ற 'கவின் கலைமாலை - 2008" நிகழ்வின் படத்தொகுப்பு

IMG_0002
IMG_0005
IMG_0007
IMG_0009
IMG_0011
IMG_0014
IMG_0016
IMG_0017
IMG_0020
IMG_0023
IMG_0024
IMG_0030
IMG_0035
IMG_0041
IMG_0044
IMG_0049
IMG_0055
IMG_0060
IMG_0066
IMG_0069
அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகனின் முதலாம் ஆண்டு நினைவு விழா ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நிரம்பி வழிந்த மக்கள் மத்தியில் ஸ்காபரோ கலை பண்பாட்டுக் கழகத்தினரால் இனிதே நடத்தப்பட்டது.

பொதுச் சுடரேற்றல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவானது கனேடிய, தமிழீழக் கொடி ஏற்றங்களுடனும், ஈகைச்சுடர், அமைதி வணக்கத்துடனும் தொடர்ந்தது. மக்கள் நீண்ட வரிசையிற் காத்திருந்து மலர்தூவி ஞானசீலன் என்னும் இயற்பெயர் கொண்டு தமிழீழ இலட்சியத்துடன் வாழ்ந்து மறைந்த அம் மண்ணின் மைந்தனுக்கு மலர்களால் மட்டுமன்றித் தமது உள்ளத்து உணர்வுகளாலும் வணக்கம் செலுத்தினார்கள்.

பல வகையான நடன நிகழ்ச்சிகள் மக்களை முற்றாக மெய்மறக்கச் செய்யும் வண்ணம், கருத்துக்கள் பொதிந்தவையாகச் சிறப்புற ஆடிக் காண்பிக்கப்பட்டன. போராட்டத்தின் தற்போதைய நிலமை, அதன் வளர்ச்சிகள் பற்றியும், தாயக மக்களின் துயரங்களும் எடுத்துக் கூறப்பட்டுபு; புலம்பெயர் வாழ் மக்களுக்கிருக்கும் பொறுப்புக்களும் அழுத்தம் திருத்தமாக உரைக்கப்பட்டது. இடையே இளைஞர்களை உள்ளடக்கிய இசைக் குழுவனரால் புதிய முறையிற் சிறார்களையும் கவரும் வண்ணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.

மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் மிகவும் சிறந்த கருத்தினைக் கொண்ட நாடகமும் வழங்கப்பட்டுக் கொடியிறக்கத்துடன் விழாவானது முடிவுக்கு வந்தது. வருகை தந்திருந்த மக்களின் எழுச்சியும், உணர்வும் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

No comments: