Wednesday 30 April 2008

(2nd le)சிலாபம் பகுதியில் நிமல் இறால் பதனிடும் மையத்தில் கருணாவிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு சாராரை வைத்து ஜேவீபியின் ஒரு குழுவினர் ஆயுத பயிற்சி!!!

ஜே.வீ.பீயின் விமல் வீரவன்ஸ, 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியில் இருந்து பிளவுப்பட்டதை அடுத்து, ஜே.வீ.பீ. சோமவன்ஸ அணி, வீரவன்ஸ அணி என பிளவுப்பட்டது. இந்த நிலையில் நடுநிலையான அணி ஒன்று உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அணி இரண்டு தரப்பின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளது. ஜே.வீ.பீயின் இரண்டு தரப்பினரும் சூழச்சிகள் குறித்து பேசி வருகின்றனர், இந்த சூழ்ச்சிகள் என்ன என்பது குறித்து மத்திய அணியினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

ஜே.வீ.பீயை பல்லின கட்சியாக உருவாக்குவதா? இல்லையா என்பது தொடர்பில் இந்த சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜே.வீ.பீயின் ரகசிய வியூகங்களில் இருந்து விடுப்பட்டு, கட்சி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது விமல் வீரவன்ஸவின் நிலைப்பாடு. ரகசிய வியூகங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து மீண்டும் ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மற்றைய தரப்பினரின் நிலைப்பாடு.

மீண்டும் ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கரும் தரப்பினர் ஜே.வீ.பீயை மத்திய தர மக்களின் கட்சியாக வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் கருதுகின்றனர்.

ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என கருதும் கட்சியின் உள்ளக தலைவரான பிரேமகுமார் குணரட்னம், அஜித் மாத்யா, குமார மாத்யா ஆகிய அரசியல் சபை உறுப்பினர்களை விமல் வீரவன்ஸ தரப்பினர் சூழ்ச்சிக்காரர்கள் என குறிப்பிடுகின்றனர்.

ஜே.வீ.பீயின் ஆயுத அமைப்பு குமார மத்தையா என்ற பெயரில் அறியப்படும் இவரின் ரகசியமான தலைமையிலேயே இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய தரப்பு சில ஆயுத பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த முகாம்கள் சிலாபத்தில் உள்ள நிமால் என்பவரின் இறால் பண்ணையிலும், கருணா தரப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களின் உதவியுடன் கிழக்கிலும, இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விமல் தரப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம், நிமால் என்ற இந்த இறால் பண்ணை உரிமையாளரினாலேயே கடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜே.வீ.பீயின் உள்ளக தலைவரான பிரேமகுமார் குணரட்னம் தொடர்பில் தற்போது அதில் இருந்து விலகி நிற்கும் நடுநிலையான அணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவர் முன்னர் ஜே.வீ.பீயின் அரசியல் சபையின் உறுப்பினராக இருந்த ரஞ்சிதம் குணரட்னம் என்ற பொறியியல் மாணவரின் சகோதராவார். 1990ஆம் ஆண்டுகளின் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கெமுனு என்ற பெயரில் இவர் திருகோணமலை மாவட்ட செயலாளராக செயற்பட்டதுடன் புளொட் அமைப்பின் உதவியுடன் கண்ணிவெடிகளை வெடிக்கும் தலைமை பொறுப்பிலும் இருந்துள்ளார்.

இதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட பிரேமகுமார் குணரட்னம் மின்னேரிய இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதன் போது அந்த முகாமின் பொறுப்பதிகாரியுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி கொண்ட இவர், தற்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேக்காவுடன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.

இதன் பின்னர் எழுத்தாளர் ரொஹான் குணரட்ன ஊடாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டார். இதனையடுத்து விடுதலையான குணரட்னம் வெளியில் தெரியாத நிலையில் இருந்து, மீண்டும் ஜே.வீ.பீயில் முனைப்புகளை மேற்கொண்டார், ஜே.வீ.பீயினரின் சுவரொட்களை ஒட்டியவர்கள் முதல் அனைவரும் கொலை செய்யப்பட்ட அன்றைய காலகட்டத்தில் அரசியல் சபை, உறுப்பினராகவும், மாவட்டச் செயலாளராகவும், கண்ணிவெடி வைக்கும் தலைவராகவும் இருந்த பிரேமகுமார், காட்டி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவே மின்னேறிய இராணுவ முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஜே.வீ.பீயின் நடுநிலையாளர்கள்

தெரிவிக்கின்றனர். 1994ஆம் ஆண்டு ஜே.வீ.பீ மீண்டும் கட்டியெழுப்ப பட்ட போது, குணரட்னம் எந்த உதவிகளை செய்யவில்லை. ஜே.வீ.பீ மீண்டும் கட்டியெழுப்பபட்டபின்னர் நந்தன குணதிலக்கவின் ஊடாக அவர் கட்சியின் உயர் பீடத்திற்குள் நுளைந்தாகவும் ஜே.வீ.பீயின் நடு நிலையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்ட பிரச்சனை போல் 1995ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது, 88-89ஆம் ஆண்டுகளில் ஜே.வீ.பீயில் இரண்டு நிலைப்பாடுகளை கொண்டவர்கள் இருந்தனர். அதில் சுயவிமர்சனம் வேண்டும் என்ற பிரிவினர் இருந்த பிரிவிலேயே சோமவன்ஸ இருந்ததாகவும் இந்த பிரிவினர் இராணுவத்தினரை கொலை செய்வதை விரும்பாது இருந்ததாகவும் இராணுவனத்தினரின் குடும்பங்களை கொலை செய்ய போவதாக ஜே.வீ.பீயினர் அப்போது நாடெங்கும் ஒட்டிய சுவரொட்களுக்கு இவர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பிரச்சினையே ஜே.வீ.பீயின் அன்றைய வீழ்ச்சிக்கு காரணமானது. குணரட்னம், சரத் ஆகியோரின் பிடியில் சோமவன்ஸ தற்போது சிக்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்த தலைமை பதவியில் அனுரகுமார திசாநாயக்க குறிவைத்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் ரில்வின் சில்வா இந்த சூழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜிதஹேரத் ஜே.வீ.பீயின் பண்டாரவளை உறுப்பினர்களை காட்டி கொடுத்தவர் என ஜே.வீ.பீயின் நடு நிலையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜே.வீ.பீயில் உள்ள அடிப்படைவாதிகள் ஆயுதம் ஏந்தும் முனைப்புகளை தடுக்க வேண்டும் என கோரும் இவர்கள் நாட்டில் ஏற்பட்ட பிண குவியல்கள் போதும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் விமல் வீரவன்ஸ குறித்து விமாச்சித்துள்ள நடுநிலையாளர்கள் விமல் வீரவன்ஸவால் பிரசாரத்தை மாத்திரமே மேற்கொள்ளமுடியும் அவர்கள் ஒருகிணைப்பு

நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளனர். எனினும் நந்தன குணதிலக்க போன்றவர்கள் அவருடன் இணைந்துள்ளமை பாக்கியமானது என்றும் தெரிவித்து;ளளனர்.

இந்த நிலையில் ஜே.வீ.பீ மீண்டும் ஆயுதம் ஏந்தும் முணைப்புகளை மேற்கொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அந்த கட்சியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா கட்சியின் செயற்பாடுகளை தடுக்க புனையப்பட்ட கதையே இது எனவும் 1971 ஆம் ஆண்டு 89ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையை அடுத்தே ஜே.வீ.பீயினர் ஆயுதம் ஏந்தியதாகவும் கூறியுள்ளார். எனினும் 1968ஆம் 1983ஆம் ஆண்டுகளில் இருந்து யினர் ஆயுதங்களை கொண்டுள்ளதாக ஜே.வீ.பீயின் நடுநிலையாளர்கள் தெரிவிக்கின்றனர்.





No comments: