Tuesday 29 April 2008

(3ம் இணைப்பு)அமைச்சர் மேவின் சில்லா விபத்துக்குள்ளானார்:

பொலன்னறுவ மாவட்டத்தின் தெஹியத்த கண்டிய, அரலகன்வில சந்தகல தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா படுகாயமடைந்துள்ளார். மேலும், இந்த வகான விபத்தில் களனிய பிரதேச சபையின் தலைவர் சீவலி கௌனிதிலக்க உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின் காரணமாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் கைகள் மற்றும் கால்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நெருங்கிய நண்பரான அமல் என்பர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மேலதிக சிகிச்சை அளிக்கும் பொருட்டு அவர் உலங்கு வானூர்தி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை 4.30 அளவில் அமைச்சர் மேர்வின் சில்வா பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமாக சென்றதால் வீதியைவிட்டு விலகி மரமொன்றில் வாகனம் மோதியதாக பொலன்னறுவ சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

1 comment:

ttpian said...

porukki thanni adichittu vandiyila poyiruppan!