Sunday 27 April 2008

வகை தொகையின்றிய கைதுகள் தொடர்கின்றன.(19 தமிழர்கள் கைது)

பிலியந்தலையில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 19 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பிலியந்தல நகரில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் அந்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து சென்று வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் இளைஞர்கள் 19 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை நேற்று இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது 10 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

No comments: