Tuesday 29 April 2008

திருகோணமலையில் ஜே.வீ.பீ அலுவலகம் தீயூட்டப்பட்டுள்ளது:

திருகோணமலை அக்போபுர பிரதேசத்தில் உள்ள ஜே.வீ.பீயின் பிரசார அலுவலகம் இன்று (29-04) அதிகாலை எரியூட்டபட்டுள்ளது. அடையாளம் தெரியாத குழு ஒன்று இதனை மேற்கொண்டதாக ஜே.வீ.பீயினர் தெரிவித்துள்ளனர். கறுப்பு நிற கெப் வாகனத்தில் சென்ற குழுவினர் இன்று அதிகாலை 1 மணியளவில் அலுவலகத்திற்கு தீயிட்டுள்ளதாகவும் ஜே.வீ.பீ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக ஜே.வீ.பீயினர்; கந்தளாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: