Monday 28 April 2008

பணத்திற்காக கொலைசெய்யும் இலங்கை படையினர்.

இலங்கை படையினர் பணத்திற்காக கொலை செயவதாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தலைமன்னார் பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட இலங்கையர்கள் 11 பேர் நேற்று மண்டபம் அருகில் உள்ள இந்திய சுங்க வாரிய அலுவலகத்திற்கு அருகில் தரையிறங்கியுள்ளனர்.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக காவல்துறையினர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் படையினர் பணத்திற்காக கொலை செய்தாகவும் தமிழர்களை காரணமின்றி கொலை செய்தவாகவும் தமிழகம் சென்ற இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, பணம் கோரப்படுவதாகவும் பணத்தை கொடுக்க மறுத்தல் அவர்களை கொலை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கடைக்கு சென்ற தனது சகோதரர் கொலை செய்யப்பட்டு, வீதியோரத்தில் கிடந்தாக மரிய கண்ணிகை என்ற பெண் குறிப்பிட்டுள்ளார். பணத்திற்காக பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கொல்லப்படுவதாகவும் இதனால் உயிருக்கு அஞ்சி தாம் இந்தியாவுக்கு படகில் வந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

No comments: