Wednesday 30 April 2008

ஜெயராஜ் கொலையாளியை வழிநடத்தியவர் - சூரியகுமார்: காவற்துறை:

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீதான தற்கொலைக் குண்டுதாரியை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரான சூரியகுமார் என்பவரே வழிநடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரை இலக்கு வைத்து தாக்குதல் இடம்பெற்ற வெலிவேரிய காந்தி விளையாட்டரங்கிற்கும் சூரியகுமார் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கலந்து கொண்ட பல கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளதாகவும் காவற்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது..

No comments: