கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஈழவர் ஜனநாயக முன்னணியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்றிரவு கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மட்டக்களப்பு புன்னச்சோலையில் உள்ள வேட்பாளரின் வீட்டின் மீது நேற்றிரவு 7.30 அளவில் இந்த கைக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தின் போது வேட்பாளர் வீட்டில் இருக்கவில்லை எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
Tuesday 29 April 2008
வேட்பாளர் வீட்டுக்கு கைக்குண்டு வீச்சு:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment