கிழக்குத் தேர்தல்களில் போட்டியிடும் புதிய ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த படைவீரர்களுக்கு பிள்ளையான் குழுவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
விமானப்படை, இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த குழுவினருக்கு பிள்ளையான் குழுவிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமது கட்சி பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், இது குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்த உள்ளதாகவும் புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் சனத் மனமேந்திர தெரிவித்தார்.
புதிய ஹெல உறுமய கட்சியின் தலைவர் சனத் மனேமேந்திர, அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் இணைப்பதிகாரியாகவும் செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த 12 வேட்பாளர்கள் புதிய ஹெல உறுமய கட்சியின் சார்பில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர்.
Tuesday 29 April 2008
புதிய ஹெல உறுமயவில் போட்டியிடும் இராணுவ வீரர்களுக்கு பிள்ளையான் குழுவிடமிருந்து மிரட்டல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment