Monday 28 April 2008

உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் யேர்மன் கிளையினரால் முன்னெடுக்கப்பட்ட செங்கதிர்த்தமிழ்மாலை நிகழ்வில் பழ.நெடுமாறன்

உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் யேர்மன் கிளையினரால் முன்னெடுக்கப்பட்ட செங்கதிர்த்தமிழ்மாலை நிகழ்வில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கலந்துகொண்டு பேசும்போது உலகத்தமிழர் பேரமைப்புடன் இணைந்து உ.த.ப.இயக்கம்மற்றும் பதிவுபெற்ற கழகங்களும் இணைந்து எதிர்காலத்தில் தமிழர் நலனில் அக்கறையோடு செயற்படுவது குறித்து விரிவாகப்பேசினார்.

றைன மாநகரில் கடந்த 22.4.08 மாலை 7.00 மணிக்கு ஆரம்பமான ஒன்றுகூடலின் பின்னர் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. யேர்மனியில் பதிவு செய்யப்பட்ட கழகங்களின் நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர்.உ.த.ப.இயக்கப் பொதுச்செயலாளர் துரை கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலில் யேர்மன்கிளை தலைவர் திரு.தனபாலசுந்தரம் செயலர் நயினை விஜயன் ஆகியோர் இந்த ஒன்றுகூடலை நடாத்தினர்.

No comments: