Monday 28 April 2008

கல்கிசையில் சுற்றிவளைப்பு 15 தமிழ் இளைஞர்கள் கைது

பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 15 தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4 மணிமுதல் பிற்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே மேற்படி இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகேஸ் பெரேரா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments: