Monday 28 April 2008

சிங்கள பிரதேசங்களில் மீட்கப்படும் குண்டுகளும் தொடரும் பதட்டமும்:

இலங்கையின் குருநாகல் மாவட்டத்தின் கலகமுவ பிரதேசத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நேரக்கணிப்புக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பேருந்து ஒன்றிற்குள் இருந்து இந்தக் குண்டு மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் ஓன்றாக இணைக்கப்பட்டு பேருந்தின் இருக்கைக்கு அடியில் கார்ட்போட் பெட்டி ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இக்குண்டுகள் வெடித்துச் சிதறுவதற்கான நேரமும் கணிக்கப்பட்டிருந்தனை காவல்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

பயணி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அதனை மீட்டதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு மீட்கப்பட்ட பேருந்தில் அதிகளவு பயணிகள் இருந்தனர் என்றும் குண்டு வெடித்திருந்தால் பாரிய அழிவுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

No comments: