Tuesday 29 April 2008

விமல் வீரவன்ஸ, நந்தன குணதிலகவின் புதிய கட்சி - உதயம்?.

எதிர்வரும் மே முதலாம் திகதிக்கு முன்னர் தமது தரப்பினருடன் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த தவறினால் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாக விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற விமல் தரப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த அனைவரும் தம்முடன் ஒன்றிணையுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க மற்றும் 1995ஆம் ஆண்டு ஜே.வீ.பீயில் இருந்து விலகிச் சென்ற கமல் தேஷப்பிரிய ஆகியோருக்கும் புதிய கட்சியின் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.

ஆரம்பிக்க போகும் புதிய கட்சியின் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

1 comment: