Wednesday 30 April 2008

ஜே.வி.வி.யை தேசப்பற்றாளர் இயக்கம் பிளவுபடுத்தவில்லை - இயக்கத்தின் தலைவர்

ஜே.வி.பி. பிளவுபட்டமைக்கும் தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்திற்கும் தொடர்பில்லை என இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல்30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் ஓர் சுயதீனமான அமைப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.




விமல் வீரவன்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜே.வி.பி.யிலிருந்து பிளவு படுவதற்கு தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் காரணம் என ஜே.வி.பி. தலைவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஜே.வி.பி. மாற்றுக் குழு உறுப்பினர்களால் நிபோன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கான மண்டபத்தை தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் இணை நிறுவனமான 'மவ்பிமே தியனியோ" அமைப்பு ஒதுக்கியிருந்ததாக ஜே.வி.பி. குறிப்பிட்டிருந்தது.

மேலும், தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சேனாரத்ன டி சில்வாவே ஜே.வி.பி. பிளவுபடக் காரணம் என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

No comments: