Monday 28 April 2008

மண்சரிவினால் கொழும்பு - பதுளை வீதிப் போக்குவரத்து தடை

கடும் மழை காரணமாக கொழும்பு பதுளை வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு ரத்தினபுரி - பதுளை பிரதான வீதி ஒபநாயக்க மாதொல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் வீதியின் போக்குவரத்து முற்றாக ஸதம்பிதம் அடைந்துள்ளது.

இதேவேளை, கிலிமலே பிரதேசத்தில் மாணிக்ககல் அகழும் சுரங்கமொன்றில் பணியாற்றிய 6 பேர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

ரத்தினபுரி, எலபாத, கொடகவெல பிரதேசங்களில் வெள்ள அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

வெள்ள அபாயம் காரணமாக இன்றைய தினம் (ஏப்ரல்28) ரத்தினபுரி மாவட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

குருகங்க, களுகங்க, ரத்கங்க ஆகிய நதிகள் மழை காரணமாக பெருக்கெடுத்து ஓடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: