Wednesday 30 April 2008

அமைச்சர் ஜெயராஜின் கொலை தொடர்பில் கைதான பெண் சயனைட் உட்கொண்டு மரணம் - பிரேத பரிசோதனையின் போது இது உறுதி

இது தொடர்பாகத் தகவல் தெரிவித்த காவல்துறைப் பேச்சாளர், என்.கே.இலங்கக்கோன், மரணமடைந்த ராணியின் இரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதில் சையனைட் கலந்திருந்தமையை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்தே திடீர் சுகவீனமடைந்து அவர் மரணமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளேயின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மர்மமான முறையில் மரணமடைந்த 35 வயதான ராணி என்ற தமிழ்ப் பெண் சையனைட் உட்கொண்டே மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். பிரேத பரிசோதனையின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



ராணி சந்தேகத்தின் பேரில் கைதான போது காவல்துறையினரால் கடுமையாகச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும், மிகவும் ரகஸியமான முறையில் சையனைட் வில்லை ஒன்றை இவர் கொண்டுவந்திருக்கின்றார் எனவும் காவல்துறையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மரணமடைந்த சந்தேகநபர் வவுனியாவைச் சேர்ந்தவர் என அவரது அடையாள அட்டையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் குறிப்பிட்ட அடையாள அட்டை போலியானது என்பது விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளேயைப் படுகொலை செய்த தற்கொலைக் குண்டுதாரியுடன் நெருக்கமான தொடர்புகளை ராணி வைத்திருந்ததாகவும் காவல்துiயினர் குறிப்பிடுகின்றார்கள்.

1 comment:

Anonymous said...

This incident confirms that Jeyaraj was killed by the Govt and the govt tries to put the blame on Tamil groups.

Idea to promote Mrs Jeyaraj also double confirms Govt hand in the murder of Jeyaraj