Wednesday 30 April 2008

தமிழகத்தை நோக்கிச் செல்லும் இலங்கை அகதிகள்:

இலங்கையில் இருந்து 37 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இரண்டு படகுகளில் ராமேஸ்வரம் சென்றடைந்ததாக தமிழக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வவுனியா, மன்னார், பேசாலை பிரதேசங்களைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் பிரவேசித்துள்ளதாக தமிழக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் தற்போது அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: