Monday 28 April 2008

யோஸித ராஜபக்ஸவிற்கு துணை லெப்டிணன் பதவி ????

ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்ஸவிற்கு இன்னும் சில மாதங்களில் கடற்படையின் பதில் துணை லெப்டிணன் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.




திருகோணமலை கடற்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற யோஸித தற்போது பிரித்தானிய கடற்படை அகடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

யோஸித ராஜபக்ஸ கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி கடற்படையில் இணைந்து கொண்டார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலதிக கெடட் பயிற்சிகளுக்காக பிரித்தானிய சென்றார்.

அங்கு 12 மாத காலப் பயிற்சி பெற்றுள்ள யோஸித மிட் சிப்மன் தரத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும், பதில் துணை லெப்டிணனாக பதவி வகிக்க வேண்டுமாயின் இன்னும் 12 மாத கால பயிற்சியை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரியவருகிறது.

1 comment:

ttpian said...

forget about that post-tigers will defenately offer "SIVALOHA PATHAVI"