Tuesday 29 April 2008

கொழும்பில் தொடரும் முடிவின்றிய கடத்தல்கள்.

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் 23 வயதுடைய செல்வச்சந்திரன் நிசாந்தன், மற்றும் கருநாகரன் ஆகியோர் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்புக் குழு மற்றும் முகத்துவாரம் காவற்துறை என்பவற்றில் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான 16 கிழமைகளில் 18 பேர் இவ்வாறு இனம்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

No comments: