Monday 28 April 2008

ரவூப் ஹக்கீம் தோல்வி அடைய ஜாதிக ஹெலஉறுமய பிரார்த்தனை.

கிழக்கு மாகாண தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தோல்வியடை வேண்டும் என பிரார்த்திக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.

அனைத்து பௌத்த விகாரைகள் மற்றும் ஆலயங்களின் எண்ணெய் விளக்கேற்றி ரவூப் ஹக்கீமின் தோல்விக்கான வேண்டுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் கிழக்கு மாகாண மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒழுக்க நெறி நிறைந்த புத்த புத்திரரான மேதானந்த தேரர் அம்பாறை நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சங்க சம்மேளணத்தின் கூட்டத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.முஸ்லிம் மக்களின் தாயகம் அரேபியா எனவும் கிழக்கில் அவர்களுக்கு உரிமைகள் இல்லை எனவும் ஏற்கனவே எல்லாவள மேதானந்த தேரர் கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments: