Wednesday 30 July 2008

10ம் வகுப்பு மட்டும் படித்த ராஜதந்திர அறிவில்லாத அமெரிக்காவுக்கான புதிய இலங்கை தூதுவர்

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா இலங்கையுடன் ஆழமானதொரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திச் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி புஷ்ஷிடம் தெரிவித்தார்.












இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜாலியவிக்கிரமசூரிய மகிந்தவின் மைத்துனர் முறையிலானவரென்றும்,10ம் வகுப்பு மட்டும் படித்த ஒரு வர்த்தகர் மட்டுமே இவருக்குரிய தகுதியென கொழும்பு வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.


இலங்கையின் ராஜதந்திர நிர்வாகிகளை மலினப்படுத்திய நியமனமென தெரிவிக்கின்றன.

அத்துடன் இவருக்கான ஆலோசகராக கருணாவை இலங்கை அரசுக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் ஜக்கிய தேசியகட்சியின் முக்கியஸ்தராகவிருந்த அலிசாகிர் மௌலானவை அமெரிக்க தூதரகபணியில் அமர்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments: