Thursday 31 July 2008

கொழும்பு நகரத் தமிழ் வர்த்தகர்களுக்குத் தொலைபேசி அச்சுறுத்தல்கள்: பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன்


கொழும்பு நகர வர்த்தகர்களுக்குத் தொலைபேசிகள் மூலம் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்துத் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதியமைச்சர் பீ இராதாகிருஷ்ணன் காவல்துறை மா அதிபரிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

கொழும்பு நகர வர்த்தகர்கள் தமக்கு அண்மைக் காலமாக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கவனஞ் செலுத்துவதாகக் காவல்துறை மா அதிபர் உறுதி அளித்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: