Tuesday 29 July 2008

கல்முனையில் ஒருவர் கடத்தல் - திருமலை உப்புவெளியில் ஒருவர் சுட்டுகொலை!!

திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 18 வயதான மரியதாஸ் சாயதாஸ் என இனங் காணப்பட்டுள்ளதாக உப்புவெளிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பினனர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என உப்புவெளிக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

kalmunai

திங்கள் பிற்பகல் மோட்டார்சைக்கிளில் வந்த ஆயுததாரிகளால் 18 அகவையுடைய பிரசாத் என்பவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.வன்னியர் லேன் 2ம் குறிச்சி கல்முனையை சேர்ந்த இவரது கடத்தல் தொடர்பாக கல்முனை பொலிஸ்சில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: