Tuesday 29 July 2008

புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்த யுத்த நிறுத்தத்தை மீறினராம்- இது எப்படியிருக்கு??

இன்று காலை புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப்பகுதியான பூ நகரியிலிருந்து 10 தடவைகள் முகமாலையிலுள்ள படையினரின் நிலைகள் மீது ஆட்லறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு படையினர் காயமடைந்ததாக படைதரப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறிவிட்டனராம்.புலிகளின் யுத்த நிறுத்த அறிவித்தலின் பின்னர் தேவன்பிட்டியில் படையினரின் தாக்குதலில் 16வயதுடைய வினாயகர் செல்வகுமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதனைவிட தொடர்ச்சியாக படை நடவடிக்கையை அரசாங்கம் நடாத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்த அறிவிப்பின் மத்தியில் முகமாலையில் படையினர் தாக்குதல்

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்க் மாநாட்டை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் போர் நிறுத்த அறிப்பு செய்துள்ள நிலையில், சிறீலங்கா படையினர் சற்று முன்னர் முதல் முகமாலையிலும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

முதல் தாக்குதலை ஆரம்பித்த படையினர், விடுதலைப் புலிகள் முதலில் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக கொழும்பின் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

No comments: