Tuesday 29 July 2008

இலங்கையின் நீதித் துறையுடன் மோதுகிறார் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி

நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்க மறுத்துள்ளார்.

தொடர்ந்தும் நிதியமைச்சின் பொறுப்புக்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி செயலக தவல்கள் தெரிவிக்கின்றன.

ஜயசுந்தரவை பதவியில் இருந்து நீக்கினால் தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி செயலகம் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பி.பீ. ஜயசுந்தர தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதபதியிடம் நேற்று கையளித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடையு ஜனாதிபதி நீதித் துறையுடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகி உள்ளதனைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: