எதிரிகளால் வன்பறிப்புச் செயய்ப்பட்டுள்ள எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து விடுதலைக் குறிக்கோளை உறுதியாக அடைவோம் என்று கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். |
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முகாமையாளர்கள் ஒன்றுகூடலில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: எதிரியின் வன்பறிப்பு போர் முன்னெடுப்புக்களால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தமது தொழில்களை இழந்து இடம்பெயர்ந்துள்ள கடற்றொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மரநிழல்களின் கீழ் வாழும் நிலை உருவாகியுள்ளது. பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை மக்கள் இழந்துள்ளனர். எதிரியின் திட்டமிட்ட போர் வன்பறிப்பு நடவடிக்கைகளினால் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ள எமது மக்கள் ஏதிலிகளாக வாழும் அவலத்தை சிங்கள அரசு உருவாக்கியுள்ளது. எமது மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு எதிரியால் வன்பறிப்புச் செய்யப்பட்டுள்ள நிலப்பகுதிகளை மீட்டெடுத்து விடுதலைக் குறிக்கோளை அடைந்து கொள்வதுதான் தமிழர்களுக்குள்ள ஒரே முடிவு. அதனை நாம் செய்வோம் என்றார் அவர். |
Tuesday 29 July 2008
இழந்த நிலங்களை மீட்டு இலட்சியத்தை அடைவோம்: கடற்புலிகளின் துணைத்தளபதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment