Wednesday 30 July 2008

கிழக்கின் அபிவிருத்திக்கு சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்-த.ம.வி.புலிகள்

இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கும், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் சார்க் நாடுகளின் ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சார்க் மாநாட்டினை நடாத்துகின்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை தமது அமைப்பு வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானா, இதன் மூலம் பயங்கரவாதம் எல்லைகளற்றது என்பதை சார்க் நாடுகளுக்கு மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்த முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"பயங்கரவாதம் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பிராந்தியத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் பயங்கரவாதம் பரவியிருக்கிறது. எனவே பிராந்தியத்திலுள்ள எல்லா நாடுகளும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முன்வரவேண்டும்" எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை படையினர் விடுவிப்பதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் கடுமையான துன்பங்களை அனுபவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அம்மக்களுக்கு உதவுவதற்கு சார்க் நாடுகள் முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

No comments: