Wednesday 30 July 2008

கொழும்பு கல்கிஸ்ஸையில் 11 தமிழர்கள் கைது


கொழும்பு கல்கிஸ்ஸை பகுதியில், இன்று காலை 6 மணிமுதல் முற்பகல் 10 மணிவரையிலும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது,11 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

காவல்துறையினர், படையினர் மற்றும் சிவில் படையினர் ஆகியோர் நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை இன்று கொழும்புக்குள், பிரவேசித்த சுமார் 500 வாகனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதேவேளை இன்று கைதுசெய்யப்பட்டவர்களில் பலர், தமது அடையாளங்களை நிரூபிக்கத்தவறியவர்கள் என காவல்துறையினர், தெரிவித்துள்ளனார்.

No comments: