Monday 28 July 2008

உணவுப் பொருட்கள், சிறீலங்கா படைகளால் சூறையாடப்பட்டு வருகின்றன.

கப்பல் மூலம் யாழ் குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள், சிறீலங்கா படைகளால் சூறையாடப்பட்டு வருகின்றன.

‘பால’, ‘றுகுணு’, ‘வின்ரன்’ போன்ற கப்பல்களில், யாழ் குடாநாட்டிற்கு
உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்கா
அரசாங்கம் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்ற பொழுதும்,
இவற்றில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்டும்
உணவுப் பொருட்கள், படையினரால் சூறையாடப்படுகின்றன.

இதனை விட, உணவுக் கப்பல்களில் சிறீலங்கா படைகளுக்கான
சீருடைகளும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக, தெரிய வருகின்றது.

No comments: