கிளி நொச்சி, முல்லைதீவு ஆகிய பகுதிகளுக்கான தொலைபேசி சேவைகள் யாவும் முழுமையாக சிறீலங்கா ராணுவத்தால் துண்டிக்கப்பட்டுவிட்டது.
021228 மற்றும் 021222 ஆகிய இலக்கத்தில் தொடங்கும் சுமார் 800 வாடிக்கையாளரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
21228 இலக்கத்தில் தொடங்கும் கிளி நொச்சிக்கான இணைப்பின் ஊடாக சம நேரத்தில் 120 பேர் தொடர்பாடல் செய்யமுடியுமெனவும்,21222 இலக்கத்தில் தொடங்கும் முல்லைதீவுக்கான இணைப்பில் சம நேரத்தில் 30 பேர் தொடர்பாடல் செய்யமுடியுமென ரெலிகொம் வட்டார பொறியியலாளர் தெரிவிக்கிறார்.
இவை அனைத்தும் சில தினங்களுக்கு முன்னரே துண்டிக்கப்பட்டுவிட்டதாக அறியமுடிகிறது.
இதனால் அத்தியாவசிய சேவைகளுக்கான மாவட்டசெயலகம்,வைத்தியசாலை,அரசசார்பற்ற நிறுவனங்கள் ,உட்பட அனைத்து சேவைகளுக்குமான வன்னி நிலவரங்களை அறியமுடியாதபடியும் தடுக்கப்பட்டுள்ளது.
வன்னியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடவுள்ள இனபடுகொலைகள், மக்களின் துயரங்கள் வெளியுலகிற்கு செல்லாதபடி முன் கூட்டியே திட்டமிட்டே தொலைபேசி சேவையை துண்டித்துவிட்டதாக ஊடக துறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.
Tuesday 29 July 2008
இது நாள் வரை துண்டிக்காது இருந்த தொலைபேசி சேவைகளும் துண்டிப்பு - வன்னி நிலமைகளை இருட்டடிக்க அரசு முஸ்தீபு!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment