Thursday 31 July 2008

உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய காவற்துறை அதிகாரி – நீதிமன்றம் தண்டனை

கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட காவற்துறைப் பொறுப்பதிகாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை முயற்சி மேற்கொண்ட குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகபர் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை குறித்த காவற்துறை உத்தியோகத்தர் நீதிமன்றில் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.


புத்தளம் பிரதேச பிரபல அரசியல்வாதியின் நண்பர் ஒருவரை கைது செய்யாது நீதிமன்றிற்கு குறித்த உத்தியோகத்தர் பொய்த் தகவல்களை வழங்கியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் காவற்துறை உத்தியோகத்தருக்கு ரொக்கப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

No comments: