Monday 28 July 2008

தாக்குதலை நடத்திவிட்டுச்சென்ற ஆ.ஊடுருவும் அணியினர் மீது மக்கள் படை தாக்குதல் - ஒருவர் பலி.

கடந்த வெள்ளிக்கிழமை மாங்குளத்திற்கும் இளவன் குளத்திற்கும் இடையில் கிளேமோர் தாக்குதலை மேற்கொண்ட சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் ஒருவர் மக்கள் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் கிளிநொச்சி மாவட்ட அரசசெயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சாந்தலிங்கம் விமலகுமார் மீதே இக்கிளைமோர் தாக்குதல் நடத்திய படையினரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த ஆழஊடுருவும் அணியினர் மீதே கடந்த வெள்ளிக்கிழமை மாலை மக்கள் வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது உடலம் இன்று அனைத்துலகசெஞ்சிலுவைச் சங்க ஊடாக சிறிலங்காப் படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: