Sunday 27 July 2008

இராணுவத்தில் இருந்து தப்பிய 6 பேர் யால வனப்பகுதியில் கைது


இராணுவத்தில் இருந்து தப்பிவந்த 6 பேரை படையினரும் வனபரிபாலன அதிகாரிகளும் கைதுசெய்துள்ளனர்.

யால பாதுகாக்கப்பட்ட வனப்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டபோதே இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பேரூந்துகள் தாக்குதல்களுக்கு உள்ளானமையை அடுத்து, புத்தல கதிர்காமம் வீதியில் உள்ள இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்க படையினர் தடைவிதித்துள்ளனர்

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட, படையில் இருந்து தப்பி வந்த 6 பேரிடமும் இருந்து கைத்துப்பாக்கிகளும் ஏனைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

No comments: