Sunday 27 July 2008

கிளிநொச்சி மருத்துவமனையில் குருதிக்குத் தட்டுப்பாடு

கிளிநொச்சி மருத்துவமனையின் குருதி வங்கியில் அனைத்து வகைக் குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குருதி வங்கிக்குப் பொறுப்பான மருத்துவர் பிறைற்றன் தெரிவித்துள்ளார்.

குருதிக்கொடை வழங்க முன்வருவோர் உடனடியாக கிளிநொச்சி பொது மருத்தவமனை குருதிவங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அனைத்து மக்களுக்குமான மருத்தவ சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும்

தற்போது இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் பொதுமக்கள் காயமடைகின்ற நிலமையும் அதிகரித்து வருவதால் குருதியின் தேவை அத்தியாவசியமானதாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: