Wednesday 30 July 2008

கொழும்புக்கு வந்த வயோதிபப் பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு

நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு வந்த வயோதிபப் பெண்ணிடம் மிகவும் தந்திரமான முறையில் ஐந்து பவுண் எடையைக்கொண்ட தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவம் அண்மையில் அளுத் மாவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆட்டோ சாரதி ஒருவரே இந்த துணிகர செயலில் ஈடுபட்டவராவார். ஆமார் வீதியில் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அளுத் மாவத்தையில் தனது மகள் வீட்டுக்கு பயணித்துள்ளார்.

அளுத்மாவத்தை பொலிஸ் சந்தி தாண்டியதும் தனது நகைகளை கழற்றி தன் கைப்பைக்குள் வைத்துக்கொள்ளும்படி சாரதி தெரிவித்துள்ளார். வயோதிப மாது தன் தாலிக் கொடியை மட்டும் கழற்றி தன் கைப்பைக்குள் வைத்துக்கொணடாராம்.

பொலிஸ் சந்தி தாண்டி சென்ஜோன்ஸ் சந்தியில் ஆட்டோவை நிறுத்தி தொடர்ந்து நடந்து செல்லும்படி கூறி ஆட்டோ பயணத்துக்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு மறைந்துவிட்டானாம்.

வீடு வந்து மகளிடம் விபரத்தை கூறி கைப்பையை திறந்துபார்த்த போது நகையை ஆட்டோ சாரதி திருடி இருப்பது தெரியவந்ததுள்ளது.

No comments: