மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் பாரிய வரட்சி நிலவுவதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலேயே கடும் வரட்சி நிலவுவதால், பல மைல் தூரம் சென்றே பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் குடிநீரை பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குளங்கள் வற்றி வரண்டு காணப்படுகின்றன. சில்லிக்கொடி ஆற்று வாய்க்கால் உட்பட அனைத்து வாய்க்கால்களும் வற்றி வரண்டு காணப்படுகின்றது. இதனால், இப்பகுதி மக்களின் அவலம் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உடன் கவனம் செலுத்தி பவுசர் மூலம் நீரினை வழங்குவதன் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
Tuesday 29 July 2008
படுவான்கரைப் பிரதேசத்தில் கடும் வரட்சி குடிநீர் தேடி அலையும் பொது மக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment