Monday 28 July 2008

வவுனியா பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: ஐந்து படையினர் பலி- ஏழு பேர் படுகாயம்

திங்கட்கிழமை, 28 யூலை 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதி ஊடான இலங்கைப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாலமோட்டைப் பகுதி ஊடாக இன்று திங்கட்கிழமை மாலை 3:35 மணியளவில் இலங்கைப் படையினரின் பின்தளங்களிலிருந்து ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை மாலை 4:45 மணிவரை நடத்திப் படையினரை அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர்.

இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். ஏழு படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments: