Wednesday 30 July 2008

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றின் அறிவிப்பால் பிரிட்டனில் உள்ள தமிழர் கடும் அதிர்ச்சி.

ஐரோபிய நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அகதிகள் அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கைத் தமிழாகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பிரிட்டன் அரசின் முடிவிற்கெதிராக அண்மையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று வழங்கிய தீர்ப்புத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருந்தது.


அத் தீர்ப்பு தொடர்பாக எல்லோருமே ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்த வேளையிலே புதிதாக ஒரு அதிர்ச்சித் தகவலை ஐரோபிய நீதிமன்றப் பதிவாளா வெளியிட்டுள்ளார்.

அதாவது இனி ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் தமது நாடு கடத்தலை நிறுத்தவதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் பிரிட்டனில் உள்ள சகல நீதிமன்ற முறைமைகளையும் அணுகி முடிந்த பின்னரே அதனை உறுதிப்படுத்தியே இடைக்காலத் தடை உத்தரவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இல்லையேல் நாடு கடத்தலை நிறுத்த முடியாது என்றும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான அணுகுமுறை இருக்குமேயானால் ஏற்கனவே. தீர்ப்பு வழங்கப்பட்ட NA GV The UK என்ற வழக்கின் முடிவிற்கு எதிராக இலகுவாக மேன்முறையீட்டில் வெற்றி பெறுவதற்கு பிரிட்டன் அரசிற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக ஐரோப்பிய நீதிமன்று பதிவாளர் நாயகத்திற்கு சர்வதேச அகதிகள் அமைப்பின் இயக்குநர் ரீ. குரேலந்திரன் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

'ஏற்கனவே, முன்னணி வழக்குத் தீர்ப்பான NA வழக்கில் பிரிட்டிஷ் அரசு, குடிவரவு நீதிபதிகள் உயர் நீதிமன்றம் ஆகியவை கடைப்பிக்கும் அணுகுமுறையை விலாவாரியாக ஆராய்ந்துள்ளீர்கள். இந்நிலையில், தமிழ் அகதிகள் வீணான செலவுகளை விரயம் செய்வதனைத் தவிர அதனால் பலன் இல்iலை என்பதனை உணர்வீர்கள்.

புதிய விண்ணப்ப முடிவுகள் கூட விண்ணப்பதாரியை கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைத்த பின்னரே முடிவுகளை வழங்கி விடுவதால் மேல் நீதிமன்ற விண்ணப்பங்களை சட்ட மீளாய்வு செய்வதில் கூட பல சிக்கல்கள் எழுகின்றன.

இது தவிர குடிவரவு நீதிபதிகளின் முடிவுகளுக்கு எதிராக மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் போது முடிவுகள் கூட விண்ணப்பிக்கும் போது முடிவுகள் கூட விண்ணப்பதாரிக்கு நேரே அனுப்பப்படாமல் அரசு அலுவலகத்துக்கே பல தடவைகள் அனுப்பட்டு அவர்கள் மூலமே அகதி விண்ணப்பதாரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடனடியாக இந்த முடிவை மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென குலேந்திரன் ஐரோப்பிய மனித உரமைகள் நீதிமன்ற பதிவாளரை வேண்டியுள்ளார்.

எனவே, அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகள் உடனடியாக தமது சட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.


விசா பெற ஆங்கில மொழிப் பரீட்சை திட்டத்தை கைவிட்து பிரிட்டன்

குடியேற்ற வாசிகளுக்கு ஆறுதலளிக்கும் செய்தியொன்றை பிரிட்டன் அறிவித்துள்ளது.

தமது நாட்டில் குடியேற விரும்புவோர் ஆங்கிலமொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் அதன் பின்னரே விசா வழங்கப்படுமெனவும்

அறிவித்திருந்த திட்டத்தை இப்போது பிரிட்டன் கைவிட்டுள்ளது. அதற்குப் பதிலாக பிரிட்டனுக்கு அவர்கள் வருகை தந்த பின் ஆங்கிலத்தை கற்று சொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்தி;ட வேண்டுமென கோரப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், திருமண விசா பெற்று பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்கள் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்யும் நோக்குடன் வெளிநாட்டுக்கு செல்லும் பிரிட்டிஷ் பிரஜை பிரிட்டனை விட்டு செல்வதற்கு முன்னர் அதனை அறிவிக்க வேண்டும் என்று புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிப் பகுதியில் இது அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வலுக்கட்டாயமாக திருமணங்களை தடுக்க இப்புதிய சட்ட விதிகள் உதவுமென பிரிட்டிஷ் அரசு எதிர்பார்கிறது. 18-21 வயதிற்கு இடைப்பட்ட பிராயத்தவரே இந்தப் பலவந்த திருமணங்களால் பாதிக்கபடுகின்றனர். பலவந்த திருமணங்களால் பாதிக்கப்பட்டோர் உடல், உளரீதியாக பலகாலம் துன்பப்பட வழிவகுப்பதாகவும் இதற்கு சமூகத்தில் இடமளிக்கப்படாதெனவும் பிரிடடன் உள்துறை அமைச்சர் ஜாக்குவி ஸ்மித் கூறியுள்ளார்.

இதனடிப்பiயிலேயே விசாவுக்கான வயதெல்லையை அதிகரித்தல், திருமணத்திற்கு வருகை தருவோரின் விண்ணப்பங்களை கடுமையாக பரிசோதித்தல், ஆங்கிலம் கற்றுக் கொள்ள வலியுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி தினக்குரல்

No comments: