Thursday 31 July 2008

சிறிய அணுமின் உற்பத்தி ஆலைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துதாம்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிறிய அணுமின் உற்பத்தி ஆலைகளை அமைப்பது கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக் இந்தியாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சில நாடுகள் இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றன.

சிறிய ரக அணுமின் உற்பத்தி ஆலைகளின் மூலம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய சில நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இலங்கை???, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் அணு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை சில நாடுகள் இந்திய அணு நிறுவனத்திடம் ஏற்கனவே விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் குறைந்த செலவில் சிறிய ரக அணு மின் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக பல நாடுகள் எதிர்வு கூறியுள்ளன.

No comments: