Thursday 31 July 2008

இலங்கை கடற்படையினரால் 80 இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சுமார் 80 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை தாக்கப்பட்டதாக தமிழகத்தின் ராமேஸ்வர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1974 ஆம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு பொறுப்பளிக்கப்பட்ட கச்சத்தீவு பகுதியில் இந்த 80 மீனவர்களும் 20 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்ள்ளது.

இதன் போது பல மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக கடலில் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலங்களின் பின்னரே இவர்களை நீந்தி கரையை வந்தடைந்ததாக ராமேஸ்வர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களை கண்டித்து கடந்த ஒரு மாதக்காலமாக மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்திய மத்திய அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்தே தொழிலுக்கு திரும்பினர். இந்தநிலையிலேயே இன்று இந்த தாக்குதலை இலங்கை கடற்படையினர் நடத்தியுள்ளனர்.

No comments: