Monday 28 July 2008

இந்தியாவின் சிறப்பு வானூர்திகள் 3 இலங்கையில்

5வது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை செல்லவுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து மூன்று சிறப்பு வானூர்திகள் நேற்று( 27) கொழும்பை சென்றடைந்துள்ளன.

இந்த உலங்குவானூர்திகள் நேற்று மாலை 3.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தாக படையதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை சார்க் நாடுகளின் தலைவர்கள் இலங்கை செல்லும் போது,

பயணிகள் விமான சேவைகளில் சிறிய காலதாமதங்கள் ஏற்படலாம் என தெரியவருகிறது. எனினும் காலதாமங்களை தவிர்க்க கூடியளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொதுவிமான போக்குவரத்து அதிகாரச்சபையின் தலைவர் பராகிரம திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: