Tuesday 29 July 2008

வெள்ளவத்தை பிரதேசத்தில் 17 தமிழர்கள் கைது

வெள்ளவத்தை பிரதேசத்தில் 17 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தை பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட விசேட தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் வடக்கு கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments: